தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் சாதரணமான செடி! இந்த செடி வீட்டில் இருந்தால் போதும் கடன் பிரச்சனை வராது!

- Advertisement -

அனைவரும் துளசிச்செடியை மகாலட்சுமியாக வழிபட்டு செல்வ செழிப்பையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்வார்கள். உங்களுக்கு தெரியுமா கற்பூரவல்லி செடி வெறும் மூலிகை செடி மட்டுமல்ல. கற்பூரவல்லியும் மகாலட்சுமியின் அம்சம் என்று உங்கள் அனைவருக்கும் தெரியுமா ?. இந்த கற்பூரவல்லி செடியை முறையாக வாஸ்துபடி வைத்து வழிபட்டால் வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து செல்வ செழிப்பு பெருகும் . ஆரோக்கியம் பெருகும். குடும்பத்தில் பிரச்சனைகள் தீரும். சங்கடங்கள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் உள்ள அனைத்து சங்கடங்களும் தீர்ந்து வீட்டில் ஒற்றுமையை நிம்மதியும் அதிகரிக்கும். துளசிச்செடி வழிபாடு என்பது இந்து மதத்தில் அதிக அளவு உள்ளது ஆனால் கற்பூரவல்லி செடியை வழிபடுவது என்பது புதிதாக இருக்கும் சிலருக்கு. காரணம் கற்பூரவல்லியை வரும் மூலிகை செடியாக மட்டுமே பாவித்து அனைவரும் வளர்த்திருப்பார்கள்.

-விளம்பரம்-

மகாலட்சுமியின் அம்சம்

கற்பூரவல்லி செடியை மகாலட்சுமி அம்சமாக திகழ்கிறது. கற்பூரவல்லி செடி கண்ணில் பட்டாலே நாம் செல்லும் செயலில் வெற்றி கிடைக்கும். நம்மை சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்கள் விரண்டோடும் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆகையால் வீட்டில் எப்பொழுதும் கண்ணில் படும்படியான இடத்தில் கற்பூரவல்லி செடிகளை வைத்து இருப்பது மிகவும் சிறந்தது. செல்வ செழிப்பு பெருகுவதற்கு வீட்டில் ஒரு கற்பூரவல்லி செடியை வைத்து தினமும் வணங்கினால் மகாலட்சுமி தேவியின் அருள் கிடைத்து வீட்டில் செல்வம் பெருகும். இந்தச் செடியில் வரும் வாசனை மனதிற்கு நிம்மதியை கொடுக்கின்றது. மேலும் இந்த வாசனையை நுகர்ந்தாலே மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கின்றது. இந்த செடியின் வாசனை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சுவாசப் பாதையில் உள்ள கோளாறுகளை இந்தச் செடியின் நறுமணத்தை நுகர்ந்தால் சரியாகும்.

- Advertisement -

கற்பூரவல்லி வழிபாடு

இத்தகைய நற்பண்புகளைக் கொண்ட இந்த கற்பூரவல்லி செடியை மகாலட்சுமி தேவியாக நினைத்து எப்படி வழிபடுவது என்பதை தெரிந்து கொள்ளலாம். கற்பூரவல்லி செடிகளை நாம் தினமும் சென்று வரும்பொழுது கண்களில் தெரியும் அளவிற்கு நட்டு வைத்து வளர்க்க வேண்டும். அப்படி நாம் வெளியில் சென்று வரும் பொழுது கற்பூரவள்ளி செடியை பார்க்க நேர்ந்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். வெளியில் செல்லும் பொழுது பார்த்தால் செல்லும் காரியம் சிறப்பாக நடைபெறும் உள்ளே வரும்பொழுது பார்த்தால் நம்மை சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்கள் இழுத்துக் கொண்டு நம் மனதிற்கும் நம்மைச் சுற்றியும் நேர்மறை எண்ணங்களை கொடுக்கும். தினமும் இந்த செடிக்கு நீரூற்றும் பொழுது மகாலட்சுமி தேவியை மனதில் நினைத்துக் கொண்டு உங்களுக்கு என்ன தேவையோ அதை வேண்டிக் கொண்டீர்களானால் உங்கள் தேவை நிச்சயமாக நிறைவேறும்.

கடன்தொல்லை தீர பரிகாரங்கள்

கடன் பிரச்சனை தீர்வதற்கும், வருமானம் அதிகரிப்பதற்கும், சேமிப்பு பெருக்குவதற்கும் சில பரிகாரங்கள் உண்டு. அந்த பரிகாரங்களை செய்வதோடு விடாமுயற்சியோடு கடும் உழைப்பையும் கொடுத்தால் நம் வருமானம் அதிகரிப்பதோடு கடன் பிரச்சினை தீர்ந்து வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும்.

வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி சில செடிகளை வளர்ப்பதன் மூலம் மகாலட்சுமி அருளும், செல்வ செழிப்பும், வருமானமும் அதிகரிக்கும், கடன் பிரச்சினை தீரும். அப்படி வீட்டில் வாஸ்து மூங்கில் செடிகள் அதாவது சிறிய அளவிலான மூங்கில் செடிகள் வாஸ்து செடிகள் என்று கடைகளில் கிடைக்கும். அந்த செடிகளை வாங்கி வளர்க்கலாம். செம்பருத்தி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செம்பருத்தி செடி வளர்ப்பதும் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவுகிறது. அதேபோல் மாதுளை செடியும் மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது. வீடுகளில் மாதுளை செடிகள் வளர்த்தாலும் லட்சுமி கடாட்சம் பெருகும். கடன் பிரச்சனை தீரும். நாம் வளர்க்கும் செடிகள் எல்லாம் வெறும் செடிகள் மட்டுமல்ல அவைகள் மூலிகைகள் அவற்றில் ஆன்மீக அம்சமும் அமைந்திருக்கிறது. ஆகையால் வீட்டில் வளர்க்கும் செடிகளில் என்ன நன்மை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அந்த செடிகளை முறைப்படி எத்திசையில் வளர்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டு வளர்த்தால் வீட்டில் நிம்மதி, சந்தோஷம், ஆரோக்கியம் , வருமானம் அதிகரித்து குடும்ப ஒற்றுமை போன்றவைகள் நிலைத்திருக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : மறந்தும் கூட துளசி செடிக்கு அருகில் வைக்க கூடாது பொருட்கள் ? அப்படி வைத்தால் நடக்கும் தெரியுமா ?