சொந்த வீடு வாங்க முடியாது என்பவன் கூட வீடு வாங்க யோகம்‌ தரும்‌ காமாட்சி விளக்கும் ஐந்து ரூபாய் நாணயமும்!

- Advertisement -

நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது. சிலருக்கு வீட்டுக்கு மேல் வீடு சேர்ந்து வருமானம் கொழிக்கும் வீட்டு உரிமையாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும். சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் பல்வேறு துன்பத்தில் உழன்று கிடப்பதும் நடக்கும்.

-விளம்பரம்-

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும், சொந்த வீடு இருப்பவர்கள் இன்னொரு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் இந்த பரிகாரம் செய்தால் கை மேல் பலன் கிடைத்துள்ளதாக வீடு கட்டியவர்கள் அனுபவப்பூர்வமாக கூறியுள்ளனர். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கு

உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர் காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்று சொல்லப்படுகிறது. விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

விளக்கு ஏற்றும் முறை

பொதுவாகவே நமது வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கில் ஐந்து ரூபாய் நாணயம் போட்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வந்தோமேயானால் சுப காரிய தடைகள் எல்லாம் நீங்கி சொத்து வாங்கும் யோகம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஐந்து ரூபாய் நாணயத்தை காமாட்சி அம்மன் விளக்கில் போட்டு விளக்கேற்றி வருவார்கள். அதிலும் தங்க நிறத்தில் உள்ள ஐந்து ரூபாய் போட்டு விளக்கு ஏற்றி வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஐந்து ரூபாய்க்கு பதில் தங்கத்தால் ஆன லட்சுமி பொறித்த நாணயத்தை விளக்கில் போட்டு விளக்கேற்றி வருவதன் மூலம் நமது வீட்டில் இருக்கும் பிரச்சினைகளும் படிப்படியாக குறைந்து நமது வாழ்க்கையும் தங்கம் போல் மின்ன ஆரம்பிக்கும். தங்க நாணயம் போட்டு விளக்கேற்றும் பொழுது நல்லெண்ணைக்கு பதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தினமும் விளக்கு ஏற்ற முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது அதாவது வெள்ளிக்கிழமையிலாவது இந்த விளக்கினை ஏற்ற வேண்டும். இந்த விளக்கினை நாம் ஏற்றி வரும்பொழுது நாம் எந்த தரத்தில் இருந்தாலும் நமது வாழ்க்கை மேம்பட்டு வர இந்த தீப வழிபாடு உதவும்.

-விளம்பரம்-

இந்த விளக்கு ஒளியின் மூலம் மகாலட்சுமி தாயார் தங்கத்தின் ஒளியைப் போல நமது வீட்டிலேயே தங்கி விடுவார். அது மட்டுமல்லாமல் நமது வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது விளக்கிற்கு பக்கத்தில் சிறிய அளவு கற்கண்டு வைப்பதன் மூலம் நமது வீட்டில் தானியங்கள் என்றென்றும் குறையாமல் இருக்கும். தினமும் இந்த கற்கண்டுகளை நாம் மாற்றி வைக்க வேண்டும் இப்படி செய்வதன் மூலம் செல்வ வளங்கள் பெருக ஆரம்பிக்கும்.

தினமும் விளக்கு ஏற்றி சாமிக்கு கற்கண்டு வைக்கும் வீட்டில் என்றென்றும் துயரங்கள் ஏற்படவோ, கஷ்டங்கள் ஏற்படவோ வாய்ப்பே இல்லை. எனவே, இந்த வழிபாட்டின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இதனை மேற்கொண்டு சொந்த வீடு வாங்குவதற்கான யோகத்தையும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கான யோகத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதனையும் படியுங்கள் : பெண்கள் அவசியம் இதை தெரிந்து கொள்ள வேண்டிய 5 பூஜை அறை குறிப்புகள்!

-விளம்பரம்-