அதிர்ஷ்டத்தையும் அளவில்லா பணத்தையும் அள்ளித்தரும் கண்ணாடி பரிகாரம் இப்படி ஒரு முறை செய்து விடுங்கள்!

- Advertisement -

பொதுவாக அனைவருக்குமே தங்களாது வீடு எப்பொழுதும் செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் இருக்கும். பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. அதனால் அதனை நிறைவேற்றி கொள்வதற்காக நாமும் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் பணம் சேர்க்க நாம் பல வழிகளில் முயற்சி செய்தாலும் பணம் நம்மிடம் தங்காது. சில பேருக்கு சில பரிகாரங்கள் செய்தால் தான்‌ பணம் நிரந்தரமாக வீட்டில் தங்கும். பணம் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

-விளம்பரம்-

அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேர சிறு எளிய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயங்களை கடைபிடிப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான உயர்வு உண்டாகும், அவர்கள் செய்யும் செயல் வெற்றியாகும், இதனால் பணம் பெருகும். வருமானம் உயரும், அதிர்ஷ்டம் வந்து சேரும் என நம்பப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பணம் தரும் கண்ணாடி பரிகாரம்

கண்ணாடி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவேதான் கோவில் விஷேசங்கள், வீட்டு விஷேசங்களில் பங்கேற்க வருபவர்களுக்கு கண்ணாடியை பரிசாக தருவார்கள்.

வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து முறை உண்டு. கண்ணாடி மங்களகரமான பொருட்களுடன் சேர்ந்தது அதனால் துன் நாம் எங்கு சென்றாலும் முதலில் கண்ணாடியை பார்த்து விட்டு தான் வெளியில் செல்ல வேண்டும் என சொல்கிறார்கள்.

வாஸ்து பார்வையில், உங்கள் உடல் தோற்றம், உங்கள் செயல்கள், எண்ணங்கள், கனவுகளை பிரதிபலிக்கும் திறனை கண்ணாடி கொண்டுள்ளது. அதனால் வீட்டில் நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி எப்போதுமே பளிச்சென சுத்தமாக இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

பொதுவாக கண் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து எளிதில் விடுபட வீட்டில் நுழைவு வாசலில் ஒரு பெரிய கண்ணாடியை மாட்டி வைத்து விடுங்கள். இதன் மூலம் கண் திருஷ்டியிலிருந்து தப்பிவிடலாம்.

கண்ணாடியானது நல்ல சக்தியை வரவேற்கும் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். எதிர்மறை ஆற்றகள் அதிகரிக்காத வகையில் கண்ணாடியை சரியான திசையில் மாட்டி வைப்பது அவசியம்.

கண்ணாடியை நாம் அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். ஒருபோதும் கவனக்குறைவாக கையாண்டு அதை உடைத்து விடக்கூடாது.

-விளம்பரம்-

முகம் பார்க்கும் கண்ணாடியானது சுக்கிரன், மகாலட்சுமிக்கு இணையானது. எனவே நம்முடைய வீட்டில் பணம் வைக்கும் பெட்டி அல்லது நகை வைக்கும் பெட்டி கண்ணாடியுடன் அமைந்திருப்பது யோகம் தரும் என்பார்கள்.

வீட்டின் பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதற்கு பூஜை செய்ய வேண்டும். தெய்வங்களுக்கு நாம் எடுக்கும் ஆரத்தி அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் போது அந்த இறைவனின் அருள் கிடைத்து பண வரவு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

பச்சை நிற பட்டாம்பூச்சி

நீங்கள் எங்காவது பச்சை நிற‌ பட்டாம்பூச்சியை பார்த்தால் உடனே உங்களுக்கு இருக்கும்‌ பண பிரச்சினையை சொல்ல வேண்டும். பச்சை நிற பட்டாம்பூச்சியை பார்த்து இப்படி சொல்வதன் மூலம் அது நிச்சயமாக நடக்கும். இதனை பார்த்தாலே போதும் அதிர்ஷ்டம் கிட்டும் என்பது நம்பிக்கை. நாம் வசிக்கும் வீட்டிற்கு பச்சை நிற பட்டாம்பூச்சி வந்து போனால் அது நல்லது என்று கருதப்படுகிறது. மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடும் பொழுது பட்டாம்பூச்சி உயர்ந்த குணாதிசயங்கள் கொண்ட உயிரினமாக கருதப்படுகிறது. இது நம்முடைய வீட்டிற்கு வந்து சென்றாலே போதும் அதிர்ஷ்ட தேவதை நம்மளை தேடி வந்துவிட்டாள் என்று அர்த்தம்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த 2 பொருட்களை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள் அது போதும்!