வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த 2 பொருட்களை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள் அது போதும்!

- Advertisement -

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது பழமொழி. மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். அதனால் அனைவருமே அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அதாவது நாம் மிகவும் கடினமாக உழைத்து அந்த பணத்தை சேமித்து வைப்போம். ஆனாலும் அந்த செல்வம் நீண்டநாட்களுக்கு நிலைத்து இருக்காது ஏதாவது ஒருவகையில் செலவாகிவிடும்.

-விளம்பரம்-

பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது. எனவே பணத்தை சம்பாதிக்கவும், அதை நமது பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும், புகழ் செல்வாக்குடன் வாழவும் சில விசயங்களை நாம் செய்ய வேண்டும். நாம் உழைத்த பணத்தை சேமித்து வைப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதனை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

உப்பு மற்றும் படிகாரம்

நாம் அனைவரும் கல் உப்பை சமையலில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் கல் உப்பு ஆன்மீகத்திலும் மிகப் பெரிய சக்தி கொண்டது. படிகாரம் வீட்டில் வைப்பதால் மகிழ்ச்சி, செழுமை வீட்டில் நிலைக்கும். தொழில் மற்றும் வேலையிலும் வெற்றி பெறலாம். இப்படியான கல் உப்பு மற்றும் படிகாரம் வைத்து கேட்ட வரங்களை தரும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பரிகாரம் செய்யும் முறை

பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது மண் குடுவையை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் கண்ணாடி பாட்டில் நிறைய உப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் சிறிய துண்டு படிகாரக் கல்லை எடுத்து உப்பினுள் சொருகி வைத்து விடுங்கள். பின்னர் இதனை எடுத்து பீரோவிற்கு அடியில் ஒளித்து வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தவர் தவிர இந்த பொருள் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது.

இந்த பரிகாரத்தை செவ்வாய், வியாழன் அல்லது வெள்ளி கிழமைகளில் நாம் தொடங்கலாம். இதில் இருக்கும் உப்பை நாம் ஒவ்வொரு அமாவாசை தினங்களிலும் மாற்ற வேண்டும். உப்பை மாற்றும் போது அதனை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள், அல்லது செடிகளில் கரைத்து ஊற்றி விடுங்கள். ஆனால் படிகாரக் கல்லை மட்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதுமானது.

-விளம்பரம்-

இந்த பரிகாரம் செய்வதினால் பண வசியம் ஏற்பட்டு வீட்டினுள் நல்ல மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும். பணம் உங்கள் கைகளில் தாராளமாக புரள்வதை நீங்களே உங்கள் கண்கூடாக பார்க்கலாம். இந்த பரிகாரத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்களும் செய்து செல்வ செழிப்புடன் வாழுங்கள்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக சேர வேண்டுமா ? இதுவரை நீங்கள் அறிந்தீராத குபேரர் பற்றிய வழிபாடு!