கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவொரு உணவிற்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல், என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் பல கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் ஒரு உணவு என்றால் அது உருளை கிழங்கு வறுவல் அல்லது கருணைக்கிழங்கு பொரியல் தான். இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பொரியலை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் கல்யாண ரசப் பொடி எப்படி செய்வது ?
எனவே கல்யாண வீட்டில் வைக்கப்படும் அதே சுவையில் எப்படி கருணைக்கிழங்கு பொரியல் செய்யலாம் என்று தான் பார்க்க இருக்கிறோம். இப்படி உங்கள் வீட்டில் ஊள்ளவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கல்யாண வீட்டு சுவையில் கருனை கிழங்கு பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
கருணைக்கிழங்கு பொரியல் | Karunai Kilangu Poriyal Recipe In Tamil
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ கருணைக்கிழங்கு
- 2 தக்காளி
- 2 வெங்காயம்
- 1 முழு பூண்டு நசுக்கியது
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதாகியதும் உப்பு, மிளகாய் தூள், மற்றும் கருணைக்கிழங்கு, சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக விடவும்.
- விசில் சத்தம் அடங்கியதும் கருணைக்கிழங்கு பொரியலை சாதத்துடன் பறிமாறவும்.