கேதுவின் பெயர்சியால் வரும் காலங்களில் கஷ்டபட போகும் ராசிகள் எச்சரிகையாக இருக்க வேண்டும்!

- Advertisement -

நிழல் கிரகமாகிய கேது மனிதனுக்கு கர்மத்தை போதிக்க கூடியவர். தான் என்று அகந்தையை அழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் தான் பலசாலி ,தான் புத்திசாலி தன்னால் எதையும் செய்ய இயலும் என்ற கர்வம் ஒருவருக்கு இருந்தால் அது கேது கூரிய குணமாகும். ஞான காரகனாகிய கேது ஒருவரது ஜாதகத்தில் நீச்சமடைந்தார் அவரது வாழ்வில் திருமணத்தடை , குழந்தை பேறு தாமதமாதல் , மனக்குழப்பம், பொருளாதார சரிவு, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை தொழிலில் பிரச்சனை, போன்றவைகள் வரும். கேது ஒருவரது ராசி அல்லது லக்னத்தில் வந்தால் அவர்களுடைய நல்ல செயல்களை வினைகளை எல்லாம் பறித்துக் கொண்டு இருளில் தள்ளிவிடுவார்.அதாவது பிரச்சனைகளை கொடுப்பார் . தான் என்ற அகம்பாவம் அழியும் வரை அவர் நமக்கு பல பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே இருப்பர். தானென்று அகம்பாவம் அழியும் பொழுது அங்கு கேதுவின் நல்ல பலன்களை முழுமையாக நாம் பெற முடியும். அதுவரை அவர் நமக்கு வாழ்வில் பல பிரச்சனைகளை கொடுத்து கொண்டிருப்பார். ஞானத்திற்கான அதிபதியாக இருக்கக்கூடிய கேது பகவான் நம்மளுடைய பாவ புண்ணிய கணக்கின்படி நமக்கு வாழ்வில் பிரச்சனைகளை கொடுத்து அதற்கான நற்பலன்களை பின்பு கொடுக்கிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால் அவ்வளவு எளிதாக இந்த பலன்களை நாம் அடைந்து விட முடியாது. அதற்காக பல சங்கடங்களையும் துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி வந்து ஆனந்த நற்பலனை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக நம் வாழ்வில் பல சோதனைகள் எல்லாம் வரும். அச்சோதனைகளை எல்லாம் தாண்டி நாம் வெற்றி பெற்ற கேதுவின் அருளை பெற வேண்டும். அப்படி நாம் வெற்றி பெறுவதற்கு கேதுவே நமக்கு மாற்று வழியை காட்டி துணையாகவும் இருப்பார். அப்படிப்பட்ட கேது பகவானின் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அசுப பலன்களை கொடுக்கிறது என்பதை பற்றி பார்க்க போகிறோம். கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று கேது பெயர்ச்சியானது. கன்னி ராசியில் சஞ்சரிக்கும் கேதுவால் பல ராசிகள் பாதிப்படை இருக்கின்றன. அப்படி ரிஷபம் ,கன்னி, மகரம் போன்ற ராசிகள் பாதிப்படைகிறது. ராசிகளுக்கு எம்மாதிரியான பாதிப்பு வர இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இந்த கேது பெயர்ச்சியினால் உங்கள் ராசியில் பல மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றது. நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொண்டு கேது பகவானை வணங்கிக் கொண்டிருந்தீர்களானால் உங்களுக்கான பிரச்சனைகளை எல்லாம் கேது பகவான் தீர்த்து வைத்துவிடுவார். இந்த கேது பகவானின் பெயர்ச்சியினால் உங்கள் வேலையில் பிரச்சனை ஏற்படும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திருமணத்தடை ஏற்படலாம். குழந்தை பேறு தாமதமாகலாம். தண்ணீரில் கண்டம் இருக்கின்றது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. கர்ப்பிணி பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இந்த கேதுவின் பெயர்ச்சியினால் உங்களுக்கு சில நன்மைகள் கிடைத்தாலும் கேதுவின் ஜென்ம இராசி கன்னியாவதால் சில பாதிப்புகளும் உண்டு. இந்த கேதுவின் பெயர்ச்சியில் உங்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும். வீண் விரயச் சில செலவுகள் ஏற்படும். மற்றவரிடம் பேசும் பொழுது பார்த்து பேச வேண்டும். வார்த்தைகளை தேவையில்லாமல் உபயோகப்படுத்த வேண்டாம். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வரும் ஆகையால் வெளியில் இருந்து உணவுகளை வாங்கி உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

மகரம்

மகர ராசிக்காரர்களே ஒன்பதாம் வீட்டில் கேது சஞ்சரித்தாலும் நன்மைகள் இருப்பதைப் போன்று சில பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. வேலைகளில் மந்த நிலை ஏற்படும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு அதில் வரும் பிரச்சனைகளை நன்றாக ஆராய்ந்து அதன் பிறகு முடிவெடுப்பது மிகவும் நல்லது. பணத்தை சம்பாதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். யாரையும் நம்பி உங்கள் மனதில் தோன்றும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கேது பகவானின் பிரச்சினைகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சனிக்கிழமை தோறும் ராகுகாலம் அல்லது எமகண்டத்தில் விநாயகரை வழிபட்டு வந்தால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். கேதுவின் நீச்சம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஸ்ரீ காளகஸ்தி சென்று பரிகார பூஜை செய்து கொள்வதும் நல்ல பலனை கொடுக்கும்.