குரு பகவானால் பண மழையில் நனைய போகின்ற யோகக்கார ராசிகள் யார் தெரியுமா?

- Advertisement -

நவகிரகங்களிலேயே குரு பகவான் தான் மிகவும் மங்களகரமானவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் அதனுடைய தாக்கம் ஏற்படும். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறக்கூடிய குரு பகவானால் அந்த ராசிக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். ஒரு ராசி உச்சம் பெற்றால் அதனால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்வார்கள். பொதுவாக குருபகவான் குழந்தை பாக்கியம் தொழில் செல்வம் மகிழ்ச்சி திருமணமாகாதவர்களுக்கு திருமணம் என பலவிதமான நன்மைகளை நடத்திக் கொடுப்பார்.

-விளம்பரம்-

இப்பொழுது மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கின்ற குருபகவான் மே ஒன்றாம் தேதிக்கு பிறகு ரிஷப ராசிக்கு மாறுவார். இதனால் எல்லா ராசிகளுக்கும் சில தாக்கங்கள் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் மட்டும் பண மழையில் நனைய போகிறார்கள் அந்த ஒரு சில ராசிகள் பற்றியும் அவர்கள் என்னென்ன பலன்களை அடையப் போகிறார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

ரிஷப ராசி

ரிஷப ராசி சுக்கிர பகவானின் ராசியாக விளங்குகிறது. எனவே சுக்கிர பகவானின் ராசியாக இருக்கின்ற ரிஷப ராசிக்காரர்களுக்கு புதியதாக தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு என பணவரவு அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்க அதிகரிக்க உங்கள் வீட்டின் பொருளாதார நிலைமையும் மாறும். உங்கள் வீட்டில் நடக்காத சுப காரியங்கள் நடந்து அதன் மூலம் சுப செலவுகள் உங்களுக்கு நடக்கும். மொத்தத்தில் உங்களுக்கு பலவிதமான நன்மைகளோடு பண வரவும் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியானது சூரிய பகவானின் ராசியாக விளங்க கூடியது. எனவே குடும்ப வாழ்க்கையில் குரு பகவானால் பலவிதமான மகிழ்ச்சிகள் ஏற்படும். குரு பகவானின் இந்த ராசி மாற்றத்தால் உங்களுக்கு புது வீடு புது தொழில் புதிய பொருட்கள் என அனைத்தும் வாங்குவதற்கான யோகம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே வந்து முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பண வரவும் புதிய வரவுகளும் உங்களுக்கு வந்து சேரும்.

கன்னி ராசி

கன்னி ராசியானது புதன் பகவானின் ராசியாக விளங்கக்கூடியது. தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு என பலவிதமான நன்மைகளை குரு பகவான் கொடுப்பார். வெளியூர் சம்பந்தமான வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் பலவிதமான மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். முக்கியமான சில பொறுப்புகளும் திருமண யோகங்களும் மொத்தத்தில் ஒரு திருப்தியான வாழ்க்கையும் உங்களுக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சனி பகவானிடம் இருந்து விடுபட்டு மார்ச் 17 ஆம் தேதி வரை பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள் யார்!