Home ஆன்மிகம் கோடி ரூபாய் கடன்‌ இருந்தாலும் இதை மட்டும் உங்கள் தலயணைக்கு கீழ் வையுங்கள் அனைத்து கடனும்...

கோடி ரூபாய் கடன்‌ இருந்தாலும் இதை மட்டும் உங்கள் தலயணைக்கு கீழ் வையுங்கள் அனைத்து கடனும் அடைந்து விடும்!!

கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர்.

-விளம்பரம்-

உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடனை தீர்க்க எந்த வழியும் தெரியாமல் தடுமாறுவார்கள். கடன் மேல் கடன் பட்டு கலங்கிப்போய் நிற்பார்கள். குடும்பத்தலைவர் பட்ட கடன் அந்த குடும்பத்தையே தடுமாற வைக்கும். கடன் பிரச்சினை தீர சில ஆன்மீக பரிகாரங்கள் உள்ளன. கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம். இந்த பரிகாரத்தை உங்களால் எளிதாக செய்ய முடியுமானால் நம்பிக்கையுடன் செய்யுங்கள் கை மேல் பலன் கிடைக்கும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை அமாவாசை வரும் மூன்று தினங்களுக்கு முன்னால் தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் புள்ளிகள் இல்லாத முழுவதும் மஞ்சள் நிறத்தில் உள்ள எலுமிச்சம் பழமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்தவுடன் ஒரு கண்ணாடி டம்ளரில் பன்னீரை ஊற்றி அதனுள் இந்த எலுமிச்சம் பழத்தை போட்டு விடுங்கள். இதனை அப்படியே ஒரு மணி நேரத்திற்கு வைத்து விடுங்கள். இப்படி செய்வதினால் வெளியில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள் எல்லாம் அழிந்து விடும்.

அம்மாவசை

பின் பன்னீரில் இருந்து வெளியில் எடுத்து ஈரத்தை துடைத்து விட்டு எலுமிச்சம் பழத்தை ஒரு மஞ்சள் துணியில் வைத்து விடுங்கள். அதனுடன் ஒரு வெள்ளைத் தாளில் உங்களுக்கு இருக்கும் கடன்‌தொகை மற்றும் யாருடை கடனை திருப்பி செலுத்த வேண்டும் ‌என‌ எழுதி எலுமிச்சை பழத்துடன் வைத்து விடுங்கள். பின்‌ இதனை ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை அமாவாசை வரும் முன் இருக்கும் மூன்று நாட்களும் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். அமாவாசை தினம்‌ வந்ததும் உங்கள் படுக்கை விரிப்பு, தலையணை என அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி தூக்கி கால் படாத இடத்தில் தூர போட்டு விடுங்கள்.

இதை செய்து முடித்த பின் தலைக்கு குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டு உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன்‌ மூலம் தீராத கடன் பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வீட்டில் உண்மையாக பணம் மழையாக கொட்ட வேண்டுமா ? இந்த ஒரு செடி இருந்தால் மட்டும் போதும்!!