உமிழ்நீர் சுரக்க வைத்து வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அற்புத மூலிகைக் காய்!

- Advertisement -

மாசிக்காய்… உங்கள்ல பலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சிலபேருக்கு மாசிக்காயோட பேரைக்கூட சொல்லத்தெரியாது. சில பேர் இதை மாயக்காய்னு சொல்வாங்க. மாயக்காய்னு சொல்றதுக்கு காரணம் இந்தக்காய் நிறைய மாய வித்தைகளை செய்யும்னுகூட சொல்லலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவங்க மாசிக்காயை உடைச்சி மிளகளவு எடுத்து வாயில போட்டு சாப்பிட்டாலே காலப்போக்குல அந்தப்பிரச்சினை சரியாயிரும். சர்க்கரை நோயாளிகளுக்கு உடம்புல எங்கயாவது அடிபட்டா புண் வந்து அது ஆறாது. அதுக்கு மாசிக்காய் ரொம்ப நல்லது. முக்கியமா குழிப்புண் வந்து அது ஆறாம புண் புரையோடிப்போய் சம்பந்தப்பட்ட இடத்துல சில பகுதிகளை வெட்டி எடுக்க வேண்டியிருக்கும். அந்தமாதிரி நேரங்கள்ல மாசிக்காயை தண்ணி விட்டு உரசி அந்த இடத்துல தடவுனா சரியாயிரும்.

-விளம்பரம்-

கட்டியை கரைக்கும்

சர்க்கரை நோய் உள்ள ஒருத்தருக்கு முதுகுப்பகுதியில கட்டி வந்து சிரமப்பட்டார். டாக்டரை போய் பார்த்ததும் அறுவை சிகிச்சைதான் தீர்வுன்னு சொல்லிட்டாங்க. ஆனா அவர் தொடர்ந்து மாசிக்காயை உரசிப்போட்டு முதுகுப்பகுதியில வந்த கட்டியை குணப்படுத்திட்டார். அறுவை சிகிச்சைக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்னு சொன்னாங்களாம். ஆனா, அவர் மாசிக்காய்க்கு செலவு செஞ்சது வெறும் 50 ரூபாய்தான். இந்த மாதிரி ரொம்ப சாதாரணமா பலன் பெற்று தரக்கூடியது மாசிக்காய். இதேமாதிரி உடல் உறுப்புகள்ல சாதாரணமா வரக்கூடிய புண்களை சரிபண்றதுக்கும் மாசிக்காயை உரசி தடவுனா போதும்.

- Advertisement -

வெள்ளைப்படுதல் போக்கும்

மூல நோய்க்குக்கூட மாசிக்காய் நல்ல மருந்துதான். மூலத்துக்கு பலவகை இருந்தாலும் அதுக்கு மாசிக்காயை சாப்பிட்டு வந்தாலே போதும். மாசிக்காயை உடைச்சி தண்ணி விட்டு கொதிக்க வச்சி ஆற வச்சு அந்த இடத்தை கழுவுனாலும் பிரச்சினை சரியாகும். முக்கியமா பெண்களை பாடாய்ப்படுத்தி எடுத்துட்டு வரக்கூடிய பிரச்சினைகள்ல ஒண்ணு வெள்ளைப்படுதல். அதுக்குக்கூட மாசிக்காயை கொதிக்க வச்சி ஆற வச்சு கழுவலாம். சில பேருக்கு மூக்குல ரத்தம் வடியக்கூடிய பிரச்சினை இருக்கும். அதுக்கும்கூட மூக்குப்பொடி போடுற மாதிரி போட்டுட்டு வந்தாலும் பிரச்சினை சரியாயிரும். உடல் சூட்டை குறைக்கிறதுக்கு மாசிக்காய் சாப்பிட்டா போதும்.

உரை மருந்து

குழந்தைகளுக்கு வரக்கூடிய உடல் சூட்டை கணைச்சூடுன்னு சொல்வாங்க. அந்தப் பிரச்சினைக்கும்கூட மாசிக்காய் சாப்பிட கொடுக்கலாம். சின்ன வயசுல குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பாங்க. அப்போ ஜாதிக்காய், கடுக்காய், சுக்கு, மிளகு மாதிரி சில பொருள்களை உரசி கொடுப்பாங்க. இதை உரை மருந்துன்னு சொல்வாங்க. இந்தப் பொருள்களோட மாசிக்காயையும் சேர்த்துக் கொடுப்பாங்க. இந்த மாதிரி கொடுத்துட்டு வந்தா நிறைய பிரச்சினைகள் சரியாகும். இன்னைக்கி சூழல்ல உரை மருந்துகளை கொடுக்கிறதுக்கு குறைஞ்சி போச்சு. இந்த உரை மருந்துக்கு பல நோய்களை வரவிடாம தடுக்கக்கூடிய சக்தி இருக்கு. அதனால குழந்தை பெற்றவங்க இதை முயற்சி பண்றது நல்லது.

உமிழ்நீர் சுரக்க வைக்கும்

உமிழ்நீரை சுரக்க வைக்கிறதுக்கும்கூட மாசிக்காய் ரொம்பவே உதவியா இருக்கும். இன்னைக்கு சூழல்ல பல பேர் உமிழ்நீர் சுரக்காம சிரமப்படுறாங்க. அதுக்கு மாசிக்காயை சாப்பிட்டு வந்தாலே போதும். இதைச் சாப்பிடுறதால செரிமானக்கோளாறு பிரச்சினைகளும் சரியாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் புண் பிரச்சினையை சரிபண்ண மாசிக்காய் ரொம்ப நல்ல மருந்து. மாசிக்காயை உடைச்சி மிளகு அளவு சாப்பிட்டு வந்தாலே போதும். வயிற்றுப்போக்கு பிரச்சினையால அவதிப்பட்ட ஒருத்தர் மாசிக்காயை சாப்பிட்டே அவரோட பிரச்சினையை சரிபண்ணிட்டார். இந்தமாதிரி மாசிக்காய் பல பிரச்சினைகளை சரிபண்ணும். நல்லது செய்றதுங்கிறதுக்காக அதிகமா சாப்பிடக்கூடாது. அதேநேரத்துல மருத்துவர்கிட்ட ஆலோசனை பண்ணி சாப்பிடுறது நல்லது.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here