Home ஆன்மிகம் பணத்தை இரண்டு மடங்கு அதிகமாக சேமிக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் இருந்தால்...

பணத்தை இரண்டு மடங்கு அதிகமாக சேமிக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும்!

பணம்தான் அனைத்திற்கும் பிரதானமாக இருக்கிறது. ஏழையாக பிறந்தாலும் பணக்காரனாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதே பெரும்பாலான நடுத்தர மக்களின் புலம்பலாக உள்ளது. என்ன தான் பட்ஜெட் போட்டு, குடும்பம் நடத்தினாலும் திடீரென ஏற்படும் மருத்துவ செலவு போன்ற திடீர் செலவுகளால் பணம் விரயமாகிவிடும். அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும்.

-விளம்பரம்-

பணம் சேமிப்பு என்பது பொதுவாகவே மிகவும் நல்ல ஒரு விஷயம் அவசியமானதும் கூட. அந்த சேமிப்பையும் எல்லோராலும் சரியாக சேமித்து அதை சரியான முறையில் செலவு செய்து முன்னேறிட முடியாது. இன்றைய கால கட்டத்தில் பணம் வீண் விரைய செலவு ஆகாமல் சேமிப்பு அதிகரிக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பரிகாரங்களை செய்தால் நாம் ஆசைப்படுவது போல பணம் மூட்டையாக சேரும் என்பது உறுதி.

பணத்தை இரட்டிப்பாக பெருக்க செய்ய பரிகாரம்

நம் பள்ளி நாட்களில் மறக்கவே முடியாத முக்கிய நினைவுகளில் ஒன்று மயிலிறகு. குட்டி போடும் என்று யாரோ உருவாக்கிய ஒரு கதை. இதை நாமும் நம்பி மயிலிறகு ஒரு சிறிய துண்டு கிடந்தாலும் அதை எடுத்து நோட்டு புத்தகத்தில் வைத்துக் கொள்வோம். மயிலிறகை நோட்டுக்குள் வைத்து மூடினால் குட்டி போடும் என்று நம்பினோம். ஏன் நம்மில் பலரும் இதனை நம்பி செய்திருப்பது உண்டு. நம்பினால் கெடுவதில்லை என்ற வரிகளுக்கு ‌ஏற்ப நம்பினால் அதுவும் நடக்கும். அட ஆமாங்க! இதை செய்தால் கண்டிப்பாக மயிலிறகு குட்டி போடுதோ இல்லையோ நம் வீட்டில் பணம் நிறைய குட்டி போடும். இது கேட்பதற்கு கேலியாக இருந்தாலும் அதுதான் உண்மை.

பலரின் வீட்டிலும் பூஜை அறையில் மயிலிறகு இருக்கும். ஆனால் அதை முறையாக வைக்காததால், எப்படி வைக்க வேண்டும் என தெரியாததால் அதன் முழு பலனும் கிடைக்காமல் போகிறது. இந்த பதிவில் மயிலிறகை சரியாக பயன்படுத்தி பணத்தை இரட்டிப்பாக்க அதிர்ஷ்ட காற்றை நம் பக்கம் வீசவைக்கலாம் என பார்ப்போம்.

இந்த சூட்சம பரிகாரம் செய்வதற்கு நமக்கு இரண்டு மயிலிறகுகள் மட்டும் தான் தேவை. ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் ஒரு மயிலிறகை வைத்து விடுங்கள். அதில் ஒரு 500 ரூபாய் நோட்டை இரண்டாக மடித்து அதன் கண்ணின் மேல் படும்படி வைத்து விடுங்கள். இந்த ரூபாய் நோட்டின் மேல் மற்றொரு மயிலிறகை வைத்து இந்த புத்தகத்தை மூடி விடுங்கள். இந்த புத்தகத்தை உங்கள் வீட்டு அலமாரி அல்லது நீங்கள் பணம் புழங்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

-விளம்பரம்-

நாம் இந்த மயிலிறகு வைத்த புத்தகத்தை நம்முடைய வீட்டில் வைப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் நேர்மறை எண்ணங்களும் நேர்மறை சக்திகளும் அதிகரிக்கும். மயிலிறகிற்கு தெய்வீக சக்தி உள்ளது. அது வீடு முழுவதும் தெய்வீக சக்தியை எப்போதும் நிறைந்திருக்க செய்யும். இதனால் வீண் விரயம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, வீட்டிற்கு வர வேண்டிய செல்வம் தடையின்றி வந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் மயிலிறகு வீட்டில் வைத்தால் தீயசக்திகள் அண்டாது. வீட்டிற்கு புதிதாக வருபவர்களால் கண் திருஷ்டி, பொறாமை, தீய எண்ணங்களால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் செய்த சில நாட்களிலேயே பணவரவு உங்களைத் தேடி வரும். நம்பிக்கை இல்லாமல் இந்த பரிகாரத்தை செய்தால் பலன் தராது. அதனால் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இதனையும் படியுங்கள் : காசிக்கு சென்றால் அடுத்தது ஏன் ராமேஸ்வரமும் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா ?

-விளம்பரம்-