மூலம், மலச்சிக்கலில் தொடங்கி மாதவிடாய்க்கோளறு வரை சரிசெய்யும் அற்புத சக்தி கொண்ட வாழைப்பூ!

- Advertisement -

வாழைப்பூ… வாழை மரத்துல உள்ள எல்லா பொருளும் நமக்கு பயன்படக்கூடியது. அதேமாதிரி வாழை மரத்துல இலையில இருந்து வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை நார்னு எல்லாத்துக்குமே மருத்துவ குணம் இருக்கு. அதேமாதிரி வாழைப்பூவுக்கும் மருத்துவ குணம் உண்டு. துவர்ப்புத்தன்மை அதிகம் உள்ள இந்தப் பூவை சமைச்சி சாப்பிடுறவங்க ரொம்ப குறைவு. இதோட துவர்ப்புத்தன்மை மட்டுமில்லாம அந்த பூவுக்கு நடுவுல உள்ள நரம்பை நீக்குறதுக்கு சிரமப்பட்டு பலபேர் அதை சமைக்கிறது இல்லை.

-விளம்பரம்-

உயிர்ச்சத்துகள் நிறைந்தது

வாழைப்பூ பல நோய்களை சரி பண்ணக்கூடியது. முக்கியமா பெண்களை பாடாய்ப்படுத்துற மாதவிடாய்க் கோளாறுகளை சரி பண்றதுக்கு இந்த வாழைப்பூ ரொம்ப உதவியா இருக்கும். வாழைப்பூவுல வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, சி மட்டுமில்லாம பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம், பாஸ்பரஸ், கால்சியம்ன்னு நிறைய உயிர்ச்சத்துக்கள் இருக்கு. சத்துகள் நிறைஞ்ச வாழைப்பூ பெண்களோட கர்ப்பப்பையை பாதுகாக்கக்கூடியது. பெண்கள் பருவத்துக்கு வந்த நாள்ல இருந்து வாழைப்பூவை அடிக்கடி சாப்பாட்டுல சேர்த்துட்டு வந்தா கர்ப்பப்பை பிரச்சினையே வராது. அதே மாதிரி குழந்தையின்மை பிரச்சினை வர்றதுக்கு வாய்ப்பில்லை.

- Advertisement -

பொரியல் கூட்டு வடை

வாழைப்பூவை பொதுவா பொரியல், கூட்டு செஞ்சி சாப்பிடுவாங்க. சாலட் மாதிரி செஞ்சி சாப்பிடலாம். சிலபேர் இதை அரைச்சி சாறாக்கி குடிக்கிறாங்க. வாழைப்பூவை கொதிக்க வச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். வாழைப்பூவுல வடை செஞ்சி சாப்பிடலாம். மாலைநேரத்துல வாழைப்பூ வடையோட சுக்கு காபி சேர்த்துக்கிட்டா அவ்வளவு அருமையா இருக்கும். இந்தமாதிரி பலவழிகள்ல வாழைப்பூவை சாப்பிட்டு வந்தா பெண்களுக்கு மாதவிடாய் காலத்துல வரக்கூடிய அடிவயிற்றுவலி நிக்கிறதோட அதிகமா ரத்தம்போறது, மாதவிடாய் ஒழுங்கா போகாம இருக்கிற பிரச்சினைன்னு பல பிரச்சினைகள் சரியாகும்.

சீதபேதி வயிற்றுப்போக்கு

சீதபேதியை குணப்படுத்துறதுக்கு வாழைப்பூ ரொம்ப நல்ல மருந்து. அதாவது வாழைப்பூவை உரல்ல போட்டு இடிச்சி சாறு பிழிஞ்சி எருமைத்தயிர் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா சீதபேதி சரியாகும். அதே மாதிரி கைப்பிடி அளவு வாழைப்பூவை எடுத்து அதே அளவு கறிவேப்பிலையைச் சேர்த்து அரைச்சி எருமைத்தயிர் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டாலும் சீதபேதி சரியாகும். சீதபேதிங்கிறது வயிற்றுப்போக்கோட ரத்தமும், மலத்துல சளியும் சேர்ந்து போகக்கூடிய ஒரு பிரச்சனை. அதை சரிபண்றதுக்கு வாழைப்பூ நல்ல மருந்து.

ரத்தத்துடன் மூலம்

மூலக்கோளாறு இருந்தா சில பேருக்கு மலம் கழிக்கும் போதெல்லாம் ரத்தமும் சேர்ந்து போகும். இன்னும் சில பேருக்கு வெறும் ரத்தமா போகும். இந்த மாதிரி அடிக்கடி ரத்தம் போனா உடம்பெல்லாம் வெளுத்துப்போயிரும், இதனால உடல் பலம் குறைஞ்சி ரொம்ப மோசமான நிலைமைக்கு போயிருவாங்க. இந்த மாதிரி பிரச்சினைக்கு வாழைப்பூவை இடிச்சி சாறு பிழிஞ்சி தினமும் குடிச்சிட்டு வந்தா ரத்த மூலம் சரியாயிரும். இதைச் சாப்பிடும்போது புளி, காரம் சேர்க்கக்கூடாது. புளிக்குப் பதிலா எலுமிச்சம் பழத்தையும், மிளகாய்க்குப் பதிலா மிளகையும் சேர்க்கலாம். இந்தமாதிரி இருந்தா மலத்தோட ரத்தம் போற ரத்த மூலக்கோளாறு சரியாகும்.

-விளம்பரம்-

மலச்சிக்கல் போக்கும்

சிலபேருக்கு மலம் போற இடத்துல கடுத்துக் கிடக்கும். இந்தப் பிரச்சினைக்கு வாழைப்பூவை இடிச்சி சாறு பிழிஞ்சி அதோட கடுக்காய்த்தூள் சேர்த்து கலந்து குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும். அதேமாதிரி மலச்சிக்கல் பிரச்சினையை சரிபண்றதுக்கும் வாழைப்பூ நல்லது. வாழைப்பூவுல நார்ச்சத்து அதிகமாக இருக்கிறதால அது மலச்சிக்கலை சரிபண்றதோட மூலம் தொடர்பான எல்லா பிரச்சினைகளையும் சரிபண்ணும். ரத்தசோகையை சரிபண்றதுக்கும் வாழைப்பூ ரொம்ப நல்லது. முக்கியமா பெண்களுக்குத்தான் இந்தப் பிரச்சினை அதிகமா இருக்கு. அதனால வாழைப்பூவை எதாவது ஒருவழியில சாப்பிட்டு வர்றது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here