கெட்டுப்போன சிறுநீரகத்தை கூட செயல்பட வைக்கும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை!

- Advertisement -

மூக்கிரட்டை… மிகச்சாதாரணமாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் வளரக்கூடிய மூலிகை இது. மூக்கிரட்டை என்று சொல்லக்கூடிய மூக்கரச்சாரணை சதைப்பற்று இல்லாமல் மெல்லியதாக இருக்கும். அதே தோற்றத்துடன் சதைப்பற்றுடன் காணப்படுவது சாரணைக்கீரை. இதை வட்டச்சாரணத்தி, வெள்ளைச்சாரணை என பல பெயர்களில் அழைப்பார்கள். இதுவும்கூட மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கும் ஒரு மூலிகையாகும்.

-விளம்பரம்-

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்

மூக்கிரட்டை கீரையை தனியே சமைத்துச் சாப்பிடுவதைவிட கலவைக்கீரைகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. கிராமம், நகரம் என பாகுபாடில்லாமல் வளரக்கூடிய இந்த மூலிகையை சென்னையில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. கலவைக்கீரைகளுடன் சேர்த்து விற்கப்படும் இந்த மூக்கிரட்டையில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. சிறுநீரகக்கோளாறு முதல் மூலக்கோளாறு வரை பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்தக்கீரை மிகவும் குறிப்பாக சிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும்.

- Advertisement -

சிறுநீரகம் சீர்படுத்தும்

மூக்கிரட்டையின் வேர், இலை மற்றும் தண்டுப்பகுதியை சுத்தம் செய்து நீர் விட்டு கொதிக்கவைத்து ஒரு கசாயம் போன்று குடித்து வரலாம். சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு இதை குடிக்க கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே இலைகளை மட்டும் கசாயம் வைக்காமல் சீரகம், பெருஞ்சீரகம், ஓமம் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடிப்பது நல்லது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலருக்கு இந்த மூக்கிரட்டை கசாயம் வாழ்வு கொடுத்திருக்கிறது.

வாதக்கோளாறு சரியாகும்

மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து வதக்கி பொரியல் செய்து சாப்பிடலாம். அல்லது துவையல் செய்துகூட சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால் சுவாச பாதிப்புகள் சரியாகும். மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்தக்கீரையை சமைத்துச் சாப்பிடுவதன்மூலம் நிவாரணம் பெறலாம். வாய்வுக்கோளாறு, வாதநோய், சைனஸ் மற்றும் காமாலை நோய்கள்கூட சரியாகும். நீர்க்கட்டு என்று சொல்வார்கள். சிறுநீர் கழிக்க முடியாமல் சிலர் அவதிப்படுவார்கள். சொட்டு சொட்டாக மூத்திரம் வெளியேறும். இதுபோன்று மூத்திரக்கோளாறு உள்ள அனைவருக்கும் இந்த மூக்கிரட்டை நல்லது.

ரத்தசோகை போக்கும்

மூக்கிரட்டையின் வேர் சற்று நீளமாக சிறிய மரவள்ளிக்கிழங்கு போன்று காணப்படும். அதை நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் ரத்தசோகை, சளித்தொல்லை விலகும். இதய பாதிப்பு உள்ளவர்களும்கூட இதேபோல் அருந்தி பலன்பெறலாம். மூக்கிரட்டையின் வேரை குடிநீராக்கி குடித்து வந்தால் வாந்தி எடுப்பதுடன் வயிற்றுக்கழிச்சல் உண்டாகும். இதை உடலில் நமைச்சல், அரிப்பு உள்ளிட்ட தோல் நோய்களால் அவதிப்படுவோர் செய்து பலன்பெறலாம்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here