சுவையான முருங்கைக்கீரை சாதத்தை இவ்வாறு ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.இப்பொழுதுள்ள குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி வாய்க்கு ருசியாக உணவு வேண்டும் என்கிறார்களே தவிர, அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் அதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தோமென்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
இவ்வாறு விதவிதமாக சாப்பிடுவதில் குறை ஒன்றும் கிடையாது. ஆனால் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவு வகைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அவ்வாறு அதிக புரதச் சத்தும், இரும்புச் சத்தும் இருக்கும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலிற்கு மிகவும் நன்மையளிக்கிறது. இவ்வாறு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளித் தரும் முருங்கைக் கீரையை வைத்து செய்யும் ஒரு சாதத்தை சுலபமாக செய்து விடலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தருகின்ற உணவுகளை பலரும் ஒதிக்கி மட்டுமே வைக்கின்றனர். ஆனால் வாரத்தில் இரண்டு முறையாவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படி சேர்த்துக்கொள்ளும் இந்த சத்து நிறைந்த உணவுகளை வீட்டில் உள்ள அனைவரும் ஒதுக்கி வைக்காமல் விருப்பத்துடன் சாப்பிட வேண்டும். அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த உணவுகளை மிகவும் சுவையான விதத்தில் சமைத்து கொடுத்தால் அனைவரும் தட்டாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். அப்படி அனைவரும் விரும்பக்கூடிய சுவையில் இருக்கும் இந்த முருங்கைக்கீரை சாதத்தை எப்படி சமைக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…