செவ்வாய்க்கிழமையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும் உங்களுக்கு எவ்வளவு கடன் இருந்தாலும் தீரும்!

- Advertisement -

கடனில்லா வாழ்க்கை எப்படி இருக்கும் இந்த சந்தோஷத்தை இக்கால கட்டத்தில் வாழும் யாரும் அனுபவிப்பதே இல்லை. உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடனை தீர்க்க எந்த வழியும் தெரியாமல் தடுமாறுவார்கள். கடன் மேல் கடன் பட்டு கலங்கிப்போய் நிற்பார்கள். குடும்பத்தலைவர் பட்ட கடன் அந்த குடும்பத்தையே தடுமாற வைக்கும். கடன் பிரச்சினை தீர சில ஆன்மீக பரிகாரங்கள் உள்ளன.

-விளம்பரம்-

அவரவர் தகுதிக்கேற்ப ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. என்ன செய்தாலும் ஒரு பக்கம் கடன் பெருகிக் கொண்டே போகிறது என்பதுதான் பலரது கவலை. என்ன செய்வது இந்த கலியுகத்தில் கடன் வாங்காமல் வாழ முடியாது என்பது நம்முடைய விதி போல். ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்று மேலும் மேலும் கவலை தான் படுகிறோம். கடனில்லா வாழ்வை எப்படி வாழ்வது, கடனே வாங்காமல் எப்படி இருப்பது என்பதைப் பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

திருச்செந்தூர் முருகன்

தொழிலில் முன்னேற, வருமானம் அதிகரிக்க, கடன் பிரச்சினைகள் எல்லாம் தீர, இழந்த சொத்துக்களை மீண்டும் பெற திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருப்பாதங்களை பற்றிக் கொண்டாலே போதும். எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும்‌. உங்களுக்கு தீரா கடன் பிரச்சினை இருந்தால் கடன் வாங்கியாவது திருச்செந்தூர் சென்று, கடலில் நீராடி விட்டு முருகப் பெருமானை தரிசித்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் முன்வைத்து விட்டு வந்தாலே போதும் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். மனிதனாகப் பிறந்த யாராக இருந்தாலும் வாழ்வில் ஒரு முறையாவது திருச்செந்தூர் முருகனை சந்தித்து விட்டாலே போதும் வாழ்க்கையில் மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. கடன் தீர திருச்செந்தூர் முருகனை எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

வழிபாட்டு முறை

இந்த வழிபாட்டை 27 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழிபாட்டுக்கு முக்கியமான ஒரே பொருள் செவ்வரளி பூ தான். இந்த செவ்வரளி பூவை உங்கள் கையாலே தொடுத்து முருகனுக்கு மாலையாக போட வேண்டும். இந்த வழிபாட்டுக்கு உங்கள் பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனின் திருவுருவப் படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். முருகன் படத்திற்கு மாலை அணிவித்து படத்திற்கு முன்னால் மண் விளக்கினால் தீபம் ஏற்றி “ஓம் சரவணபவ” என்று 108 முறை உச்சரிக்க வேண்டும்.

வழிபடும் நேரம்

உங்கள் கடன் சுமை எல்லாம் தீர வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு, இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் செய்து முடித்திட வேண்டும். செவ்வாய்க்கிழமை வழிபாட்டை செய்வது என்பது மிகவும் விசேஷமான ஒன்று. ஏனென்றால், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி செவ்வாய் ஹோரை. இந்த நேரத்தில் நாம் வழிபாடு செய்தால் நம் கடன் எல்லாம் அடைந்து விடும் என்பது ஐதீகம். 27 செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பெண்களால் மேற்கொள்ள இயலவில்லை என்றாலும் வீட்டில் இருக்கும் மற்றவர்களை வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

-விளம்பரம்-

இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து வந்தால் உங்கள் வீட்டில் மாற்றங்கள் ஏற்படும். அதனை நீங்களே உங்கள் கண்கூடாக பார்க்கலாம். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை தொடர்ந்து வணங்கி வந்தாலே போதும் வீட்டில் சந்தோஷம் நிறைந்து மகிழ்ச்சி பொங்கும்.

இதனையும் படியுங்கள் : கோடி ரூபாய் கடன்‌ இருந்தாலும் இதை மட்டும் உங்கள் தலயணைக்கு கீழ் வையுங்கள் அனைத்து கடனும் அடைந்து விடும்!!