Home ஆன்மிகம் 5 ரூபாயை இந்த டப்பாவில் மறைந்து வையுங்கள் 8 நாட்களில் பணம் உங்களைத் தேடி வந்து...

5 ரூபாயை இந்த டப்பாவில் மறைந்து வையுங்கள் 8 நாட்களில் பணம் உங்களைத் தேடி வந்து சேரும்!

பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பணக் கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தினை விட அதிகமான செலவுகள் வரும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது தான் பெரும்பாலான நபர்களுக்கு கடன் வாங்குவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழநிலைகளால் பணத்தினை கடனாக பெற்றாலும் கூட அதனை திருப்பி அளிப்பதற்கான சூழல் என்பது ஏற்படாமலே போய்விடுகிறது.

-விளம்பரம்-

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும். பணம் மலைபோல் குவித்து தீராத கடனையும் தீர்வதற்கான ஒரு பரிகாரத்தை இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

நாணயம் மற்றும் கடுகு

நாம் வீட்டில் சமையலுக்கு சாதாரணமாக பயன்படுத்தும் கடுகு ஆன்மீக ரீதியாக பல பரிகாரங்களை செய்யும்போது நல்ல பலனை கொடுக்கக் கூடியது. அதே போல் கடுகு வைத்து கண் திருஷ்டி கழிப்பது போன்று தாந்திரீக பரிகாரங்களை செய்யலாம். 5 ரூபாய் நாணயம் என்பது மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்தியது என்று கூறுவார்கள். அதனால் இந்த நாணயம் மற்றும் கடுகை வைத்து தான் நாம் பரிகாரம் செய்யப்போகிறோம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு வீட்டில் உள்ள கடுகை பயன்படுத்தாமல் கடையிலிருந்து தனியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பரிகாரம் செய்வதற்கு முதலில் கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் எடுத்துவைத்துள்ள கண்ணாடி பாட்டிலில் 1 கைப்பிடி அளவு கடுகினை நிரப்பி கொள்ளுங்கள். அதில் 5 ரூபாய் நாணயத்தை யார் கண்ணிற்கும் படாதவாறு புதைத்து வைத்து விடுங்கள். குறிப்பாக இந்த ஐந்து ரூபாய் நாணயம் யார் கண்ணிற்கும் படக்கூடாது.

பரிகாரம் செய்வதற்கான நேரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இரண்டு நாட்களிலும் செய்யலாம். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை காலையில் 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். காலை வேளையில் செய்ய நேரம் இல்லாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

இந்த பரிகாரத்தை தொடர்ந்து நாம் நான்கு வாரங்கள் செய்ய வேண்டும். அதாவது நான்கு வாரத்திலும் உள்ள செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாம் இதனை செய்ய வேண்டும். 4 வாரங்கள் முடிந்த பிறகு இந்த நாணயத்தை எடுத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் இல்லாமல் மற்ற கிழமையில் தானம் செய்து விடுங்கள். இல்லையெனில் அன்னதானம் செய்து விடுங்கள்‌ அல்லது கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடுங்கள். இந்த பரிகாரத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

இதனையும் படியுங்கள் : தங்கம் இல்லாத வீட்டில் கூட தங்கம் சேர! இந்த ஒரே ஒரு இலை கையில் இருந்தால் போதும்!