அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன்,மீன் , முட்டை ,கருவாடு என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவு வகைகளில் ஒன்றான கருவாடு என்றால் போதும். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் கருவாட்டிற்கு என்று எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கருவாடு புட்டு, கருவாடு மசாலா என்று பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம். வேறு எதையும் தேட மாட்டார்கள். அதன் மணமும் சுவையும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். அதனை மறுநாள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை மேலும் அதிகமாக இருக்கும். அப்படி சாப்பிடுகையில் அதன் சுவை இன்னமும் தூக்கலாக இருக்கும். அப்படியான கருவாடை வைத்து ஒரு சூப்பரான ரெசிபியை பார்க்கலாம்.
கருவாட்டில் பல வகைகள் இருக்கின்றன. இதனை செய்யும் போது வீடே கமகமக்கும். கருவாடில் அயிரை கருவாடு, நெத்திலி கருவாடு, மாசி கருவாடு, நகரை கருவாடு என்று இன்னும் இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அந்த வகையில் இன்று நாம் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலி கருவாடு வைத்து செய்யும் தொக்கு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும்செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். வாருங்கள்! வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நெத்திலி கருவாடு தொக்கு | Nethili Karuvadu Thokku Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/4 கி நெத்திலி கருவாடு
- 2 தக்காளி
- 2 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் சோம்பு தூள்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கருவாடை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு,வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சோம்பு தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பிறகு நாம் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான நெத்திலி கருவாடு தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கமகமனு கிராமத்து கனவா கருவாட்டு குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! இந்த சுவை எதில் கிடைக்கும்!