சொந்த வீடு கட்டவே முடியாது என்று இருப்வர் கூட சொந்த வீடு கட்ட முருகனை வேண்டி இதை செய்யுங்கள்!

- Advertisement -

நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய கனவு என்றால் அது சொந்தவீடு வாங்குவது அல்லது கட்டுவதுதான். அந்த இறைவன் மனது வைத்து விட்டால் போதும் கையில் ஒரு ரூபாய் இல்லாதவன் கூட சீக்கிரமே சொந்த வீடு வாங்கி விடுவான். காசு பணம் இல்லாமல் இந்த கலியுகத்தில் சொந்த வீடு வாங்க முடியாது. ஆனால் ஏதாவது ஒரு ரூபத்தில் காசு பணத்தை கொண்டு வந்து சேர்த்து, சொந்த வீடு வாங்கும் யோகத்தை கொடுக்க கூடிய சக்தி அந்த முருகப்பெருமானுக்கு உண்டு. இறைவனையும், கிரகங்களையும் நம் வசப்படுத்திக் கொள்ள சில வழிபாட்டு முறைகளும் சில பரிகாரங்களும் நமக்கு சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. குறிப்பாக வாடகை வீட்டில் பல ஆண்டுகளாக கஷ்டப்படுபவர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே இந்த ஆசை உடனடியாக நிறைவேறும். பலருக்கு அவ்வளவு எளிதில் கை கூடுவது கிடையாது. கையில் பணம் இருந்தாலும் நமக்கென சொந்தமாக ஒரு வீடு, நிலம் வாங்க முடியாமல் தவிப்பவர்கள் பலர். அப்படியே வாங்கினாலும் வாங்கிய அல்லது கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாமல் பலரும் பல விதமான சிக்கல்களில் ஆளாவது உண்டு. இப்படிப்பட்டவர்கள் முருகப் பெருமானை வழிபட பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

- Advertisement -

முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். காரணம் இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய். செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

சொந்த வீடு வாங்க வழிபாடு

நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய். இது ராஜகிரகம். சூரியனின் தளபதி. சொந்த வீடு, நிலம், காரிய வெற்றி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, அடியவர்களுக்கு கேட்ட வரங்களை தரும் வள்ளலாக விளங்குபவர் கந்தக் கடவுள் தான். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். அது போல் நம்பி சரணடைபவர்களை காத்தருளும் தெய்வமாக, பலருக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கக் கூடியவர் முருகப் பெருமான்.

இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்கள் விரதம் இருக்க வேண்டும் என்ற‌ அவசியம் கிடையாது. அதுமட்டுமல்லாமல் இந்த வழிபாட்டை எந்த நாளிலும் செய்யலாம். ‌அதிகாலையில் நீராடி முடித்து, பழனியில் இருக்கும் முருகப் பெருமானை சென்று வழிபட வேண்டும். நாம் அனைவரும் இறைவனை தரிசிக்கும் போது நமக்கான செல்வம் உள்ளிட்ட தேவைகள் என்ன, எந்த பிரச்னைகளை எல்லாம் நாம் தீர்க்க விரும்புகிறோம் போன்ற வேண்டுதலை இறைவன் முன் வைப்பது வழக்கம். முருகருக்கு எப்படி நாட்களில் செவ்வாய் உகந்ததோ, அதே போல நட்சத்திரங்களில் கிருத்திகை மிகவும் உகந்தது. மற்ற தெய்வங்களை விட முருகப்பெருமான் மட்டும் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவது வழக்கம். அதனால் இந்த கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை ராஐ அலங்காரித்தில் தரிசிப்பதால் சீக்கிரம் வீடு வாங்க கூடிய அனுகிரகம் கிடைக்கும்.

-விளம்பரம்-

பழனி முருகனை ராஐ அலங்காரித்தில் பார்த்தாலே போதும் உங்களுடைய சொந்த வீடு கனவுகள் நினைவாக கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்காக எந்த ஒரு முயற்சி தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றியின் தான் முடியும் அது மட்டும் இன்றி அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

இதனையும் படியுங்கள் : ஒன்பது வாரம் தொடர்ந்து முருகரை இப்படி வனங்கினால் வேகமாக சொந்த வீடு கட்டுவீங்க!