Home ஆன்மிகம் வீட்டில் பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த பொருள்! இந்த பொருள் வீட்டில்...

வீட்டில் பண வரவை அதிகரிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த பொருள்! இந்த பொருள் வீட்டில் இருந்தால் மட்டும் போது!

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். ஒருவருக்கு பணம் தேவை என்பது சமுதாயத்தில் அவர்கள் இருக்கும் நிலைய பொறுத்ததை ஒருவர் மிகவும் பணக்காரராக இருக்கிறார் என்றால் அவருக்கு பண தேவை என்பது கோடிக்கணக்கில் இருக்கும். பொதுவாக இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக உள்ளது. அப்படி மிகவும் முக்கியமான பணம் என்னிடம் அதிக அளவு சேரவும் மாட்டேங்கிது சேர்ந்தாலும் சீக்கிரத்தில் செலவாகி விடுகின்றது என்று கவலைப்படுபவர்களும் அதிகம். இதன் காரணத்தால் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதை கலங்கடித்துக் கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். சிலர் சுதாரித்து கொண்டு சிறுக சிறுக பணத்தை சேர்க்கின்றனர். இருந்தபோதும் ஏதேனும் ஒரு வழியில் செலவு வந்து விடுகிறது. இந்த சூழ்நிலை மாறி அவர்கள் கையிலும் எப்போதும் தாராளமாக பணம் புழங்க இந்த எளிய பரிகாரத்தை செய்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சமயலறையில் செய்ய வேண்டியவை

சமையலறை என்பது எப்பொழுதும் பூஜையறைக்கு நிகரான ஒன்று. எனவே தான் அதனை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். சமையலறையில் அன்னபூரணியும், அக்னி பகவானும் வாசம் செய்கிறார்கள். அதனால் நாம்‌ குளிக்காமல் சமையலறைக்குள் செல்லவேக் கூடாது. காலையில் நீங்கள் குளித்து முடித்து சமையலறைக்குள் வந்தவுடன் உப்பை தான் தொட வேண்டும். இந்த உப்பை நீங்கள் தொடும் போது மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஆனால் சமையலறைக்கு சென்றவுடன் முதலில் புளியை கைகளால் தொடக்கூடாது என்று கூறப்படுகிறது. புளியை முதலில் தொட்டால் வீட்டில் இருக்கின்ற ஐஸ்வர்யமும் நம்மை விட்டு நீங்கி விடுமாம்.

பல சமயங்களில் சமையலறை சம்பந்தமான பல விஷயங்களை அலட்சியம் செய்கிறோம். சமயலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ‌வீட்டில் பிரச்சனைகளை உண்டாகும். இதனால் தாய் அன்னபூரணியும் கோபப்படுகிறார். அதுமட்டுமின்றி, வீட்டின் நிதி நிலைமையும் மோசமாகும். ஆகையால், தாய் அன்னபூரணியை மகிழ்விக்க, வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் பெற சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.

பண‌வரவை அதிகரிக்க செய்ய‌ வேண்டிய பரிகாரம்

பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் ஜோதிடத்தில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த பரிகாரங்கள் மிகவும் எளிமையானவை, அதுமட்டுமல்லாமல் இந்த பரிகாரங்களைச் செய்ய நீங்கள் எந்த சிறப்பு முயற்சியும் செய்யவேண்டியதில்லை. பூஜையின் போது ஒரு துண்டு அளவு சுக்கை எடுத்து இறைவனின் முன்பு வைத்து பணத்தேவை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வழிபட வேண்டும். பின்னர் அந்த சுக்கை எடுத்து நீங்கள் சமயலறையில் பயன்படுத்தும் துவரம்பருப்பு டப்பாவின் உள்ளே வைத்து விடுங்கள். இதனுடன் ஒரு சிகப்பு நிற துணியில் ஒரு ரூபாய் நாணயமோ அல்லது ரூபாய் நோட்டோ வைத்து மடித்து துவரம் பருப்பு டப்பாவில் வைத்துவிட்டால், பண வரவும் பெருகும். அதோடு தேவையற்ற செலவுகள் குறையத் தொடங்கும். ஏனென்றால் சுக்கு மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்தியது. இந்த சுக்கை நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களுடன் சேர்த்து வைக்கும் பொழுது பணவரவானது நமக்கு பண்மடங்காக கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சமையலறையில் இந்த டப்பாவில் மட்டும் பணம் போட்டு வையுங்கள்! பணம் தானகவே வீடு தேடி வரும்!

இறைவனின் அருள் பெற்ற சுக்கை வைத்துக்கொள்வதால் செல்வச் செழிப்பு அதிகரிப்பதுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இந்த‌ எளிய பரிகாரம் அதிர்ஷட வாய்ப்புகளைக் கொண்டுவந்து பணச்சேர்க்கையை அதிகப்படுத்தும். அதனால் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.