உடல் எரிச்சல் ஏன் ஏற்படுகின்றனர் ? அதற்கு எளிய வீட்டு மருந்து!

- Advertisement -

உடலில் எரிச்சல் என்பது அலர்ஜி அல்லது ஒவ்வாமை அல்லது செல்-லைனிங் சேதத்திற்கு வலிமிகுந்த எதிர்வினையின் நிலை . எரிச்சல் நிலையைத் தூண்டும் ஒரு தூண்டுதல் அல்லது முகவர் ஒரு எரிச்சல் . எரிச்சலூட்டும் பொருட்கள் பொதுவாக இரசாயன முகவர்கள் என்று கருதப்படுகிறது, ஆனால் இயந்திர, வெப்ப மற்றும் கதிர்வீச்சு தூண்டுதல்கள் (உதாரணமாக புற ஊதா ஒளி அல்லது அயனியாக்கும் கதிர்வீச்சுகள் ) கூட எரிச்சலூட்டும். தொல்லை தரும் உடல் அல்லது உளவியல் வலி அல்லது அசௌகரியத்தைக் குறிக்கும் மருத்துவரீதியில் அல்லாத பயன்பாடுகளையும் எரிச்சல் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

சில ஒவ்வாமைகளின் வெளிப்பாடு காரணமாகவும் எரிச்சல் ஏற்படலாம், உதாரணமாக தொடர்பு தோல் அலர்ஜி, மியூகோசல் சவ்வுகளின் எரிச்சல் மற்றும் ப்ரூரிட்டஸ். மியூகோசல் சவ்வு எரிச்சலின் மிகவும் பொதுவான தளமாகும், ஏனெனில் இது சளியை வெளியிடும் சுரப்பு சுரப்பிகளைக் கொண்டுள்ளது, இது ஒட்டும் தன்மை காரணமாக ஒவ்வாமைகளை ஈர்க்கிறது. நாள்பட்ட எரிச்சல் என்பது ஒரு மருத்துவச் சொல்லாகும், இது சில காலமாக உடல்நலக் குறைபாடுகள் இருப்பதைக் குறிக்கிறது. நாள்பட்ட எரிச்சலை ஏற்படுத்தும் பல கோளாறுகள் உள்ளன, பெரும்பாலானவை தோல், புணர்புழை, கண்கள் மற்றும் நுரையீரலை உள்ளடக்கியது.

- Advertisement -

இப்படி ஏற்படும் உடல் எரிச்சலை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சூப் தயார் செய்து மருந்தாக குடிக்கலாம். இந்த சூப் எப்படி தயார் செய்வது, இதற்கு தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த உடல் நலத் தொகுப்பில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள்

1 – கை அளவு கொத்தமல்லி
1 – பிடிதக்காளி
1/2 டீஸ்பூன் – மிளகு
1/2 டீஸ்பூன் – சீரகம்
1/2 டீஸ்பூன் – சோம்பு
1/2 டீஸ்பூன் – தனியா
2 பற்கள் – பூண்டு
1/4 டீஸ்பூன் – நெய்
தேவையான அளவு – இந்துப்பு

செய்முறை 1

-விளம்பரம்-

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள் தண்ணீர் சூடாக வரை காத்திருங்கள்.

செய்முறை 2

பின்பு இந்த நேரத்தில் மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து அதில் கொத்தமல்லி, பிடி தக்காளி, மிளகு, சீரகம், சோம்பு, தனியா, பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

செய்முறை 3

அதன் பின்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீர் நன்றாக கொதித்த உடன் அரைத்து வைத்திருக்கும் பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு இந்து உப்பையும் சேர்த்து நன்றாக கொதித்து விடவும்.

செய்முறை 4

தண்ணீரின் நிறம் மாறும் வறை நன்றாக கொதிக்க விடவும் பின்பு இறக்கி பாத்திரத்தில் உள்ள சூப்பை வடிகட்டி ஒரு டம்ளரில் பிடித்துக் கொள்ளுங்கள்.

செய்முறை 5

அதனுடன் 1/4 டீஸ்பூன் அளவிலான நெய்யை சேர்த்து தினசரி குடித்து வந்தால் உடலில் ஏற்பட்ட அரிச்சல் குறைந்து, எரிச்சல் முற்றிலுமாக அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here