- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, sweets
கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு பலவிதமான உணவுப் பண்டங்களை படைத்து வழிபடுவது வழக்கம். விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறோம். கிருஷ்ணனுக்கு பலகாரங்கள் என்றால் அலாதி பிரியம். எனவே கிருஷ்ண ஜெயந்தியன்று வித விதமான பலகாரங்களை தயாரித்து பகவானுக்கு படைப்போம். கிருஷ்ண பகவானுக்கு வெண்ணெய் மிகவும் பிடிக்கும்.
ஆனால் கிருஷ்ணருக்கு வெண்ணை மட்டும் பிடித்தமான உணவு பொருள் இல்லை. கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுகள் பல உண்டு, அவல் வைத்து செய்யும் உணவு வகைகளும் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் இந்த பதிவில் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமான அவல் லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த லட்டை செய்ய 20 நிமிடங்கள் இருந்தாலே போதும் சட்டுன்னு செய்து விடலாம். அதுமட்டுமல்லாமல் இந்த லட்டை வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த லட்டுவை விஷேச தினங்களில் மட்டும் செய்யாமல் மாலை வேளையில் சாப்பிட ஸ்நாக்ஸாகவும் செய்து கொள்ளலாம்.
இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள். எப்பவுமே ஒரே மாதிரியா இனிப்பு வகைகளை செஞ்சு சாப்பிடாமல் இந்த மாதிரி ஒரு தடவை லட்டு ரெசிபி செஞ்சு பாருங்கள். கண்டிப்பாக ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான அவல் லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தேங்காய் பால் பாயாசம்
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும் அவல் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்லம் மற்றும் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி கொள்ளவும்.
அதன்பிறகு அந்த சர்க்கரை பாகில் நாய் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அவல் பொடி சர்க்கரை பாகுடன் நன்கு கலந்து வந்ததும் ஏலக்காய் தூள், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் நெய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
பின் சூடு ஆறியதும் லட்டாக பிடிக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் லட்டு தயார்.






