புதன் பெயர்ச்சியால் இனி தொழில் அதிக லாபம் பெற போகும் ராசிகார்கள் இவர்கள் தான்!

- Advertisement -

வித்யாகாரகனாகிய புதன் ஒருவரது ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால் அவர்கள் அனைத்திலும் முதலிடம் பெற்று இருப்பார்கள். கல்விக்கு சொந்தக்காரரான இவர் ஒருவர் புத்திசாலியாக இருப்பதற்கும் உதவுகிறார். அனைவருக்கும் புத்திக்கூர்மையும் அறிவாற்றலையும் கொடுக்கக்கூடிய புதனுக்கு அனைத்து துறைகளிலும் நிபுணராக இருப்பவர்கள் புதனின் ஆதிக்கத்தின் கீழ் வருவதால் இவரை நிபுணன் என்றும் அழைக்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் புதனின் ஆதிக்கம் ஆட்சி பெற்று இருந்தால் அந்த ஜாதகக்காரர் எப்பேர்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் தனது புத்தி கூர்மையால் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து விடுவார். தீர்வுகளை எடுப்பதற்கு நல்ல அறிவாற்றலும் புத்திசாதூரியத்தையும் புதன் பகவான் கொடுப்பார். புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அத்தனை தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தோல்விகளை வெற்றி படி கட்டுக்களாக மாற்றி வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். இதற்கு காரணமாக புதன் இருக்கிறார். புதன் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும், பட்டிமன்ற நடுவர்களாகவும், வியாபாரிகளாகவும், நகைச்சுவை நடிகர்களாகவும், கணிதையில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இருக்கின்றார்கள். புதனின்ஆதிக்கம் பெற்றவர்கள் கணினி துறை மென்பொருள் துறையிலும் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்.

-விளம்பரம்-

எழுத்தில் வலிமை பெற்றவர்கள் எல்லாம் புதனின் அருள் பெற்றவர்களாக இருப்பார்கள் சிறந்த கதை எழுதுபவர்கள், கவிதைகள் எழுதுபவர்கள் புதனோடு சுக்கிரன் சேர்ந்திருந்தால் காதல் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். பத்திரிக்கை துறையில் இருக்கும் ஒரு நபர் வெற்றி பெறுவதற்கும் பத்திரிக்கை நிருபராக எடிட்டராக வேலை செய்வதற்கும் புதனின் ஆதிக்கமும் அருளும் காரணமாக இருக்கின்றது. ஆகையால் எல்லா முதன்மை தொழிலுக்கும் காரணமாக இருப்பவர் வித்யாகாரகனாகிய புதன் ஆவார். அரசியல் துறையை அலசுபவர்களுக்கும் அரசியல் விமர்சனங்களாக இருப்பவர்களும் புதனின் ஆதிக்கத்திற்கு கீழ் வருகிறார்கள். ஒருவருடைய எதிர்காலத்தை தொலைநோக்குப் பார்வை கொண்டு அலசி கருத்துக்களை தெரிவிப்பதற்கு காரணமாக புதன். ஒருவர் சிற்ப கலையில் சிறந்து விளங்குவதற்கும் புதனின் அருள் தேவைப்படுகிறது. அதுவே புதன் ஒருவரது ஜாதகத்தில் நீச்சத்தில் இருந்தால் அவர்களின் பள்ளி படிப்பை முடிக்க முடியாமல் போகிறது. ஆனால் பள்ளி படிப்பை முடிக்க இயலாவிட்டாலும் அவர்களின் புத்தி கூர்மையால் வாழ்க்கையின் அனுபவ பாடத்தால் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் . அனைத்து மொழிகளிலும் புலமை பெற்றவர்களாகவும் இருப்பார்கள் இதற்கும் புதன் ஆதிக்கம் தேவைப்படுகிறது. கல்வி நிலையங்களை நடத்துபவர்கள் போன்ற முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கும் புதன் உச்சம் பெற்று இருக்க வேண்டும். புதனோடு உருவம் சேர்ந்து இருக்க கல்லூரி இது போன்ற கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு வழி வகைகள் செய்கின்றன. இப்படிப்பட்ட புதனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அனுகூல பலன்கள் கிடைக்க இருக்கிறது என்பது காணலாம். இந்த புதன் துலாமிற்கு செல்வதால் தொழில் வளர்ச்சியில் மூன்று ராசிகள் மிகப்பெரிய மாற்றத்தை காண இருக்கின்றன அப்படி என்ன மாதிரியான மாற்றங்கள் அந்த ராசிகளுக்கு கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கும்பம்

கும்ப ராசியின் ஒன்பதாவது வீட்டிற்கு புதன் செல்ல இருக்கிறார். அதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இருக்கிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். தொழில் விரிவுபடுத்துதல் போன்ற நல்ல காரியங்கள் நடைபெறும். இதுவரை தடைபட்ட வேலைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணி புரியும் இடங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். அதேபோன்று முக்கியமான வேலைகளில் செய்து முடித்து நல்ல பெயரும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்களை எடுத்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

கடகம்

கடக ராசியின் நான்காவது வீட்டிற்குள் புதன் செல்வதால் புதிய வாகனம் வாங்குதல் புதிய சொத்து வாங்குதல் போன்றவைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் காரணத்தினால் நிறைய பணவரவு இருக்கும். பண பற்றாக்குறை என்பது இல்லாமல் இருக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் இருப்பவர்களுக்கு தீபாவளிக்கு முன்பே நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைபட்ட வேலைகள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகள் முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்ல இருக்கிறார். அதனால் பேச்சாற்றலால் பல காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். துணையுடனான உறவு புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய ஆளுமை மேம்படும். புதிய பணவரவோடு சேமிப்பும் எண்ணமும் உண்டாகும். புதனின் பெயர்ச்சியால் உங்கள் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தை ஏற்பட இருக்கின்றது.

-விளம்பரம்-