பொதுவாக சனி பகவான் நமக்கு கேடு தருவதால் அதை குறைத்து கொள்வதற்கு பக்தர்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டு வருவார்கள் இதனால் சனி பகவான் தரும் கஷ்ட பலன்கள் குறையும் அதே சமயம் மகாவிஷ்னுவின் அருளையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். இது சாதாரண மாதங்களில் நாம் செய்வோம் ஆனால் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் நாம் விரதம் இருந்து சனி பகவானையும், பெருமாளையும் வழிபட்டு வந்தால் நமக்கு அதிகப்படியான பலனை தரும் என்பார்கள் ஆகையால் புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் குறித்த ஆன்மீக தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
பாண்டவர்கள் வெற்றி பெற காரணம்
உங்கள் அனைவருக்கும் மகாபாரத போரை பற்றி தெரிந்திருக்கும் இதில் பாண்டவர்கள் வெற்றி பெற்றதற்கு காரணம் என்னவென்று தெரியுமா. அஸ்திணாபுரம் அரண்மனையில் இருந்து வனவாசம் சென்ற பாண்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானை வேண்டி விரதம் இருந்து அவரை வழிவிட்டு வந்ததால் தான் மகாவிஷ்ணுவின் பரிபூரணமான ஆசீர்வாதம் அவர்களுக்கு இருந்ததாகவும். அதனால்தான் பாண்டவர்கள் மகாபாரத போரில் வெற்றி பெற்றதாகவும் இதிகாசங்களும் நம் முன்னோர்களும் காலங்கலமாக கூறி வருகின்றனர்.
விஷ்னு சனி பகாவனை தூக்கி ஏறிந்த கதை
இந்த கலியுகம் காலகட்டம் ஆரம்பிக்கும்போது நாரதர் வழக்கம் போல் அவரது கழகத்தை தொடங்கினார். இந்த முறை அவரிடம் சிக்கியது நமது சனி பகவான். ஆம், சனி பகவான் பூ லோகத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது நாரதர் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் போய்கொள் ஆனால் திருமலை பக்கம் மட்டும் நீ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். ஆனால் சனி பகவானோ நாரதர் எதை வேண்டாம் என்று சொன்னாரோ அதனைக் கேட்டு அங்கு தான் முதலில் போனார். சனி பகவான் திருமலையில் வந்து காலடி எடுத்து வைத்த மறுகணமே சனி பகவான் தூக்கி எறியப்பட்டார் மகாவிஷ்னுவால்.
ஏனென்றால் பூலோகத்தில் வைகுண்டமாக திகழும் திருமலையில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு சனி பகவானை இப்படி செய்தார். தன் தவறை உணர்ந்த சனி பகவான் மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். சனி பகவான் மன்னிப்பு கேட்ட பின் கோபம் குறைந்து மகாவிஷ்ணு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் உன்னை நோக்கி விரதம் இருந்து வழபடுவர்களுக்கு தனது அருள் பரிபூரணமாக இருக்கும் என்று மகாவிஷ்ணு சொன்னார் என்று புராணங்களில் ஒரு கதை உள்ளது. மற்றொரு கதையும் உண்டு சொல்கிறேன்.
மகாவிஷ்னுவிடம் வரம் வாங்கிய சனி பகவான்
நவகிரகங்களில் ஒன்றாக திகழும் சனி பகவானுக்கு தான் ஒரு பாவம் செய்த கிரகமாகவும் தன்னை அனைவரும் வெறுப்பதாகவும் ஒரு மனக்குறை வெகு காலமாக இருந்து கொண்டே இருந்தது. அதைக் கேட்ட நாரதரோ மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தால் மகாவிஷ்ணு இதற்கு ஒரு தீர்வு கொடுப்பார் என நாரதர் கூறியுள்ளார். இதை கேட்ட சனி பகவானும் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் செய்தார். சனி பகவானின் கடும் தவத்தை கண்டு மணம் குளிர்ந்த மகாவிஷ்ணு அவரின் முன் தோன்றி வரம் கேட்க கூறினார்.
அதற்கு சனி பகவான் தன்னுடைய மணக்குறையை கூற சனி பகவானின் குறையை கேட்ட மகாவிஷ்ணு சனி பகவானிடம் தனக்குரிய புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் உன்னை விரும்பி என் பக்தர்கள் வழிபட்டு வருவார்கள். அவர்களுக்கு தான் அருள் புரிவேன் என சனி பகவானுக்கு மகாவிஷ்ணு வரம் அளித்ததாக ஒரு கதையும் உண்டு. ஆகையால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஞ சனி பகவானுக்கு நல்லண்ணெயில் தீபம் ஏற்றி பூஜை செய்து மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வந்தாள் அனைத்து விதமான தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கையை பெறலாம் என முன்னோர்கள் கூறினார்கள்.