இன்று நாம் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள், வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவபர்கள், தொழிலில் நஷ்டம் ஆனவர்கள், இப்படி பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அவதிப்படுவபவர்களுக்கு ஒரு தீர்வாக இந்த மரக்குச்சி இருக்கும். ஆம் பரசு மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறிய குச்சி நம்முடைய வீட்டில் இருந்தால் போதும். எவ்வளவு பெரிய பணம் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் எளிதில் தீர்க்கக்கூடிய சக்தி இந்த மரத்திற்கு உண்டு. இந்த புரசு மரத்தைப் பற்றி பெரும்பாலும் யாருமே கேள்விப்பட்டிருக்க மாட்டோம். மேலும் இந்த மரத்தை நம்முடைய முன்னோர்கள் எதற்காக வழிபட்டு வந்தார்கள் என்பதை பற்றிய செய்திகளை நாம் இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
புரசு மர ஏர் கலப்பை
அந்த காலத்தில் விவசாயம் தான் முதன்மை தொழிலாக இருந்து வந்தது. அப்பொதல்லாம் விவசாயம் செய்பவர்கள் தான் செல்வந்தராக இருந்து வந்தனர். நம்முடைய முன்னோர்கள் அனைவருக்கும் சோறு போடக் கூடிய தெய்வம் என்றால் அந்த நேரத்தில் இந்த ஏர் கலப்பை தான். அப்படிப்பட்ட ஏர் கலப்பையை செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய மர கட்டை தான் இந்த புரசு மர கட்டை.
பூஜை அறை
அப்படி புரச மர கட்டையில் செய்த ஏர் கலப்பையை அவர்கள் தங்களுடைய தெய்வமாக பார்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த ஏர் கலப்பைக்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து வீட்டில் வைத்து வழிபாடு செய்து வருவார்கள் இப்படி புரச மரத்திலிருந்து செய்யப்பட்ட ஏர்கலப்பையை வழிப்பட்டதால் தான் செல்வ செழிப்போடு இருந்தார்கள். அது போல தான் இந்த புரசு குச்சியை பூஜை அறையில் வைத்து வழிபட போகிறோம்.
வீட்டில் பணம் கொட்டும்
அதனால் புரசு மரத்தினா ஒரு சிறிய குச்சியை எடுத்து அதை மஞ்சள் தண்ணீரில் கழுவி, பின் குச்சியில் மஞ்சள் பூசி, குங்கும பொட்டு வைத்து அதன் பின்பு புரச மர குச்சியை பூஜை அறையில் வைத்து தினமும் அதைத் தொட்டு வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய பணம் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் தீரும். உங்கள் வீட்டின் செல்வம் படிப்படியாக உயரத் தொடங்குவதை நீங்களே உணர்வீர்கள். இந்த புரசு மர குச்சியை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் : கோவிலில் சாமி முன் இந்த முறை படி பிராத்தனை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்!