சனிபகவானால் 30 ஆண்டுகளுக்கு பிறகு வருமானத்தை அள்ள போகும் மூன்று ராசிகாரர்கள் யார்?

- Advertisement -

ஜோதிட ரீதியாக 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. இந்த 12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஒரு காலகட்டத்தில் ஒரு சில கிரகத்தால் பலவிதமான பிரச்சனைகளும் பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு சிறப்பான ஆளுமையும் இயல்பும் இருக்கும். அதைப் பொறுத்து அவர்களுடைய வீட்டு சூழ்நிலையும் பொருளாதார நிலையும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிலையில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவானால் பல வகையான அதிர்ஷ்டங்கள் கிடைக்கப் போகிறது. சனிபகவானுடைய சிறப்பு அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு பணக்காரர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறதுஅந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

கன்னி ராசி

தங்கள் தொழிலில் மிகவும் ஆர்வம் காட்டுபவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கும் இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம் வரப்போகிறது. இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு தலைவர் மற்றும் தலைமைத்துவ பண்புகள் உள்ளது. தொலைநோக்கு பார்வையும் அறிவார்ந்த சிந்தனையும் கொண்ட இவர்களுக்கு 30 வருடங்களுக்குப் பிறகு இவர்களின் முன்னோர்களின் சில சொத்துக்களால் பலன்கள் கிடைக்கும்.சனிபகவான் மற்றும் புத்த தேவரின் சிறப்பு ஆசிகளை கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் யோகமாக தான் இருக்கும்.

- Advertisement -

மகர ராசி

இந்த மகர ராசிக்காரர்களின் ஜாதகப்படி முப்பது வருடம் கழித்து இவர்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒளி வீசப் போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவானின் ஆசியோடு ஏராளமான செல்வத்தை பெற போகிறார்கள். அனைத்து காரியங்களிலும் ஆர்வம் காட்டி பலவகையான ரிஸ்க் எடுக்கும் மகர ராசிக்காரர்களுக்கு வெற்றி தானாகவே தேடி வரும் கடின உழைப்பாளிகள் ஆன இவர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கப் போகிறது.

கும்ப ராசி

ஜோதிட ரீதியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பான வெற்றியை பெறப்போகும் கும்ப ராசியினர் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் பெறுவார்கள். பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டும் இவர்கள் அதில் வெற்றியும் அடைந்து நல்வழியில் செல்வார்கள். உடன் இருப்பவர்களை மிகவும் நேசிக்கின்ற கும்ப ராசிக்காரர்கள் நினைத்த இலக்கை அடைய பலவிதமான கஷ்டங்களையும் சந்திப்பார்கள். கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் இவர்களிடம் இருக்கும் நற்குணங்கள் அனைத்தையும் வழங்கி இருக்கிறார்.

இதனையும் படியுங்கள் : ஆன்மீகத்தில் மூழ்கி போய் இருக்கும் ஐந்து ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்?

-விளம்பரம்-