பண பல வழிகளில் வீட்டில் சேர அரிசி டப்பாவில் இந்த ஒரு பொருளை மட்டும் ‌மறைத்து வையுங்கள் போதும்!

- Advertisement -

புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பு மாதமாக உள்ளது. பெரும்பாலானோர் இந்த மாதத்தில் ஊண் உணவுகள் மற்றும் ஆன்மீக சாஸ்திர தர்மத்தில் விலக்கப்பட்ட செயல்களை செய்வதை தவிர்த்து, விரதம் மேற்கொள்வார்கள். மூன்றாவது புரட்டாசி சனிக்கிழமை முடிந்து, நாளை ஞாயிற்று கிழமை புரட்டாசி பௌர்ணமி தினம் வருவது என்பது ஆன்மீக ரீதியில் பார்த்தால் சிறப்பான தினமாகும்.

-விளம்பரம்-

புரட்டாசி பௌர்ணமி

பெருமாளுக்கு உகந்த புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. அதே போல், இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக அற்புத விரத நாளாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியன்று அந்த சந்திரனை போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் அன்றைய தினம் விளங்குவாள். அதனால் தான் அம்பாளுக்கு சந்திர மண்டல மத்யகா என்ற பெயரும் உண்டு. 2023 ம் ஆண்டில் புரட்டாசி மாத பௌர்ணமி செப்டம்பர் 28ஆம் தேதி மற்றும் 29ம் தேதி கடைபிடிக்க இருக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த புரட்டாசி பௌர்ணமியில் நாம் ஒரு சிறிய பரிகாரத்தை செய்தாலே போதும், நமது வீட்டில் செல்வம் பெருக ஆரம்பிக்கும். அது என்ன பரிகாரம் என்பதனை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் சிகப்பு நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் சிகப்பு நிறம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த சிகப்பு நிறத் துணியை நாம் பயன்படுத்தும் பொழுது பண பிரச்சினை தீர்வதற்கான அனைத்து வழிகளும் பிறக்கும். பின் இந்த சிகப்பு நிறத் துணியில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள், அதனுடன் இலவங்கப்பட்டையும் சேர்த்து வைத்து இந்த சிகப்பு நிற துணியை ஒரு மூட்டையாக கட்டி விடுங்கள். பின் இந்த துணி மூட்டையை நீங்கள் உபயோகப்படுத்தும் அரிசி பாத்திரத்தினுள் வைத்து விடுங்கள். அல்லது ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த மூட்டையை வைத்து இதனை நீங்கள் பயன்படுத்தும் அரிசியினுள் வைத்து விடுங்கள்.

இந்த பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மூட்டை வைத்திருக்கும் அரிசியை நாம் தினந்தோறும் எடுத்து பயன்படுத்தும் பொழுது நமக்கு ஏற்படும் பணப்பிரச்சினைகள் நீங்குவதற்கான வழி பிறக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் இருக்கும் இலவங்கப்பட்டைக்கு எதிர்மறை ஆற்றலை எதிர்க்கக்கூடிய சக்தியும் உள்ளது. இந்த மூட்டையை வருடத்திற்கு ஒருமுறை வரும் பௌர்ணமி தினத்தில் மாற்றினால் போதும். இந்த மூட்டையை நீங்கள் மாற்றும்‌ பொழுது இலவங்கப்பட்டையை எடுத்து கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஐந்து ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள்.

பரிகாரம் செய்யும் நேரம்

இந்த பரிகாரத்தை நாம் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8:00 மணிக்குள் செய்துவிட வேண்டும். வியாழக்கிழமை என்பது குபேரருக்கு மிகவும் உகந்த தினம் என்பதினால் இந்த கிழமையில் நாம் பரிகாரத்தை செய்ய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வியாழக்கிழமையில் வரும் பௌர்ணமிக்கு மிகவும் சக்தி அதிகம் என்று ஆன்மீகம் கூறுகிறது.

-விளம்பரம்-

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் பொழுது கடன் தொல்லைகள் நீங்கும் பண பிரச்சனைகள் தீர்ந்து பணம் வரவு அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். இந்த பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுங்கள்.

இதனையும் படியுங்கள் : ஒரு டம்பளர் நீர் இருந்தால் போதும் அடகில் இருந்த தங்க நகையை மீட்கலாம், மேலும் தங்கம் சேரும்!