செவ்வாய்க்கிழமை அன்று முருகரை இவ்வாறு வழிபட்டால், முருகனின் அருளால் பிரச்சனைகள் தீர்ந்து, நன்றாக வாழலாம்!

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஜாதகம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவருடைய வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே கணிக்க கூடிய ஜாதக கட்டத்தில் செவ்வாய் மிகவும் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு பல விதமான இன்னல்கள் நடக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியில்லாமல் சண்டைகள் அதிகமாக வரக்கூடும். வேலையில் பிரச்சினை இருக்கின்ற இடத்தில் பிரச்சனை என்று எதைத் தொட்டாலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். வாழ்வில் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கொண்டே இருப்பீர்கள். இந்த செவ்வாய் வழிபாடு பிரச்சினைக்கும் நாம் செல்ல வேண்டிய இடம் முருகர் கோவில் தான் முருகர் வழிபாடு தான் இதற்கு சிறந்த தீர்வாக அமையும். அருகில் உள்ள முருகர் கோவிலுக்கு சென்று வழிபாட்டை நீங்கள் செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் முருகனும் உங்களுக்கு முழு அருளையும் தந்து உங்களை நன்றாக வாழ வைப்பார். முருகப்பெருமானின் இந்த வழிபாடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

முருகர் வழிபாடு செய்ய வேண்டிய முறை

உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு முருகர் கோவிலுக்கு சென்று ஒரு பித்தளை தட்டில் மூன்று வெற்றிலைகள் வைத்து அதன் மேல் மண் அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். தீபம் ஏற்றி வைத்துவிட்டு முருகா என்னை காப்பாற்று என்று அவருடைய பாதங்களை சரணடைய வேண்டும். முருகன் கோவிலிலேயே நவகிரகங்கள் இருக்கும் அதில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தில் ஆடை அணிவித்து இருப்பார்கள் அந்த செவ்வாய் பகவானுக்கு நாம் செய்ய வேண்டிய வழிபாடு ஒன்று உள்ளது அதை பற்றி பார்க்கலாம்

- Advertisement -

செவ்வாய் பகவான் வழிபாடு

செவ்வாய் பகவானுக்கு விளக்கு போடுவதற்கு வீட்டிலிருந்து வரும்போது ஒரு சிவப்பு நிற சதுர வடிவிலான துணியில்(துணியை நன்றாக அலசி காயவைத்து இருக்க வேண்டும்), அரை டீஸ்பூன் துவரம் பருப்பு சேர்த்து முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். சனிபகவானுக்கு நாம் எப்படி எழுதிபோம் ஏற்றுவோ அதேபோல் செவ்வாய் பகவானுக்கு இந்த துவரம் பருப்பு தீபம் ஏற்ற வேண்டும்.

செவ்வாய் பகவான் முன்னே ஒரு மன்ன அகல் விளக்கில் இந்த துவரம் பருப்பு முடிச்சை வைத்து அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கு பொருத்த வேண்டும். பிறகு செவ்வாய் பகவானிடம் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை கூறி நன்றாக வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு செவ்வாய் பகவானுக்கு பூக்கள் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து வந்தால் இன்னும் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

இந்த வழிபாட்டை செய்ய வேண்டிய கால அளவு

தொடர்ந்து ஒன்பது வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் பகவானுக்கு இந்த வழிபாட்டை செய்து வந்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய் பகவானை மனதார நம்பினால் நிச்சயமாக நல்ல பலன்களை கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : இந்த முருகர் கோவிலுக்குள் மட்டும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது ஏன் தெரியுமா ?