வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிப்பெயர வேகமாம முருகப்பெருமனை மட்டும் இப்படி வழிபடுங்கள் போதும்!

- Advertisement -

எவ்வளவு தான் சொத்து, பணம் இருந்தாலும் நமக்கென்று ஒரு வீடு இல்லை என்றால் அது மனக்குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்பது பலரின் ஏக்கமாகவும் கனவாகவும் இருந்து வருகிறது. நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது.

-விளம்பரம்-

சொந்த வீடு கனவு நிறைய வேற என்பதற்காக எத்தனையோ கோவிலுக்கு சென்று, எத்தனையோ பூஜை வழிபாடு என செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்பவர்கள் வீட்டிலேயே இப்படி முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்தால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

சொந்த வீடு வாங்க

கிரகங்களில் செவ்வாய் பூமி காரகன் என அழைக்கப்படுகிறார். செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். அதனால் தான் எந்த ராசியினராக இருந்தாலும் முருகனை வழிபட்டால் செவ்வாய் பகவானின் அருள் கிடைத்து வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். செவ்வாய்க்கிழமையில் முருகனை பூஜித்து வர அந்த தடை நீங்கி விரைவில் சொந்த வீடு‌ வாங்கலாம்.

இந்த வழிபாடு மிகவும் எளிமையானது தான். இந்த வழிபாட்டை செவ்வாய் கிழமை காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் முடிக்க வேண்டும். ஏனென்றால் அந்த நேரம் செவ்வாய் ஹோரை, இந்த நேரத்தில் நாம் முருகனை வழிபடும் பொழுது அதற்கான பலன் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கும். இந்த வழிபாட்டை நீங்கள் முருகன் கோவிலில் தான் செய்ய வேண்டும். அதனால் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்ற வேண்டும். அதன் பிறகு அந்த தீபத்தின் முன்னரே அமைந்து கந்த சஷ்டி கவசத்தை ஒரு முறையாவது முழுமையாக மனதிற்குள்ளேயே படிக்க வேண்டும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும். ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் இந்த வழிபாட்டை வீட்டிலேயே மேற்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்றினால் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்குமாறு விளக்கை ஏறிய விடுங்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பெற்றோர் சொல்வதை கேட்டு குழந்தைகள் வளர! கற்றாழை விளக்கு பரிகாரம்!

முருகபகவானை செவ்வாய்க்கிழமையில் தரிசிப்பதும், வணங்குவதும் பலவிதமான நன்மைகளைத் தரும். செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய் பகவானையும் முருகக் கடவுளையும் தொடர்ந்து வழிபட்டு, பிரார்த்தனை செய்து வந்தால், சொந்த வீடு மனை வாங்கும் யோகம் அமைத்துக் கொடுப்பார்.