கனவில் கூட சொந்த வீடு வாங்க முடியாது என்பவர்கள் கூட வீடு வாங்க! இதை மட்டும் செய்து பாருங்க!

- Advertisement -

இன்றைய நாட்களில் பல இளைஞர்களும் தங்களுடைய வாழ்நாள் கனவாகவும் லட்சியமாகவும் கருதுவது ஒரே ஒரு விஷயம் தான் அதுவும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற விஷயம் தான். அதனால் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தவர்களுக்கு தான் சொந்த வீட்டில் இருப்பதற்கும் உண்டான சந்தோசம் என்னவென்று தெரியும். சிலர் இடம் வீடு கட்ட நிலமிருக்கும் ஆனால் வீடு கட்ட முடியாமல் அதற்கு பல தடைகள் வந்து கொண்டிருக்கும். இப்படி சொந்த வீடு இல்லாதவர்கள், சொந்த வீடு கட்டுவதற்கும் நிலம் வைத்துக் கொண்டு அதில் வீடு கட்ட முடியாமல் தவிப்பவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பதனை நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

-விளம்பரம்-

பூமி பூஜை

உங்களிடம் வீடு கட்டுவதற்கு நிலம் இருக்கிறது. ஆனால் நீங்கள் வீடு கட்ட எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் தான் முடிகிறது என்று கவலைப்படாதீர்கள். நீங்கள் வைத்திருக்கும் நிலத்தில் வீடு கட்டுவதற்கு முன்பாக பூமி பூஜை போடுவது மிகவும் சிறந்த விஷயம். ஆனால் இப்போது பலரும் இதை செய்வது கிடையாது. நீங்கள் பூமி பூஜை செய்யும் போது நிலத்தில் இருக்கும் வாஸ்து பகவானை வேண்டி இந்த நிலத்தில் நான் வீடு கட்டி வாழப் போகிறேன் நீங்கள் இங்கிருந்து நாங்கள் நல்லபடியாக வாழ்வதற்கு அருள் புரிய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொண்டு அதன் பிறகு நீங்கள் வீடு கட்டுவதற்கு உண்டான முயற்சிகளை எடுத்தால் அனைத்திலும் வெற்றி மட்டுமே கிடைக்கும்.

- Advertisement -

பரிகாரம்

தங்களிடம் சொந்த வீடு கட்டுவதற்கு நிலம் கூட கிடையாது இனிமேல்தான் நிலம் வாங்க வேண்டும் அதற்கு அப்புறம் தான் வீடு கட்ட வேண்டும் என்று இருப்பவர்கள். உங்களுக்கு இன்னும் வீடு கட்ட யோகம் கிடைக்கவில்லை என்றால் அர்த்தம் அப்படி உங்களுக்கும் வீடு கட்டக்கூடிய யோகம் கிடைக்க வேண்டும் என்றால் நான் நான் சொல்லும் இந்த பரிகாரத்தை அப்படியே செய்து விடுங்கள். நாம் வீடு கட்டுவதற்காக வாஸ்து பகவானுக்கு செய்யும் இந்த பரிகாரத்தை வாஸ்து நாட்களில் தான் செய்ய வேண்டும். அதாவது காலண்டரில் பின்புறம் வாஸ்து பகவானுக்கு என தனியாக நாட்கள் குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த நாட்களில் தான் நாம் பூமி பூஜை உட்பட சில விஷயங்களை செய்வோம். அதனால் நாமும் அதே நாளில் தான் இந்த பரிகாரத்தையும் செய்ய போகின்றோம்.

முருகப்பெருமான்

அதனால் உங்களுக்கு நிலம் கூட இல்லை வாடகை வீட்டில் வசிக்கிறேன் சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்பது பல நாள் ஆசையாக உள்ளது என்று விரும்புவர்கள் வாஸ்து நாட்கள் உங்கள் வீட்டில் பூஜை அறையை தயார் செய்து அதில் முருகப்பெருமானின் திருவுருவப்படத்தை வைத்து அதற்கு முன்பாக இரண்டு நெய் தீபம் ஏற்றி, அதனுன் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைத்து முருகப்பா பெருமானை மனதார நினைத்து. நாங்கள் வேகமாக சொந்த வீடு வாங்கி அங்கு குடியிருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை சொல்லி மனம் உருகி வேண்டிக் கொண்டால். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் கடைசியாக முருகப்பெருமானுக்கு கற்பூர ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

வாஸ்து பகவானுக்கு நெய்வேத்தியமாக

அதன் பிறகு நீங்கள் பூஜையை நிறைவு செய்த பின் நீங்கள் முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்த வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய் ஆகியவற்றை உங்களின் வீட்டு வாசலுக்கு முன்பாக உள்ள மணலை தோண்டி அதில் புதைத்து வைத்து விட வேண்டும். இது நீங்கள் வாஸ்து பகவானுக்கு நெய்வேத்தியம் படைப்பதற்கு சமமானது. எப்படி இந்த வாஸ்து நாட்களில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்துவதன் மூலம் வாடகை வீட்டில் இருக்கும் நீங்கள் சொந்த வீடு கட்டி அங்கு குடியேறும் யோகம் சீக்கிரமாகவே உங்களுக்கு கிடைத்துவிடும்.

-விளம்பரம்-

தடைகள் அனைத்தும் நீங்கும்

அதற்காக இந்த பரிகாரத்தை செய்து முடித்தால் மட்டும் போதும் சொந்த வீட்டிற்கு வேகமாக குடியேறி விடலாம் என்று நினைக்க கூடாது. நீங்கள் சொந்த வீடு கட்டுவதற்காக வாங்குவதற்கோ உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுக்க முடியுமோ அந்த முயற்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் நீங்கள் செய்யும்போது உங்களுக்கு வரும் தடைகள் அனைத்தும் உடைத்து நீங்கள் வேகமாக சொந்த வீடு கட்டி தங்கள் குடியேறுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு யோகத்தை அள்ளி தரும். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள் : பணம் தடையே இல்லாமல் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? உங்கள் கையில் 5 மிளகு இருந்தால் மட்டும் போது!

1 COMMENT

  1. நாங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர்.
    புதைக்க முடியாத நிலை
    என்ன செய்வது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here