வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

- Advertisement -

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில் எனக்குப் பிரச்சனையே வரவில்லை என்று கூறுபவர்கள் மனிதர்களாக இருக்கவே முடியாது. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். சண்டையும் அழுகுரலும் கேட்கும் வீட்டிற்குள் அன்னை மகாலட்சுமி வரமாட்டார் என்பது நம்பிக்கை.

-விளம்பரம்-

நமது பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் நமது பிரச்சனைகளுக்கு உடனடி பலன் கிடைக்கும் என்று பல்வேறு ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர். சாஸ்திரத்தின்படி, கர்ம வினைகளைத் தீர்ப்பதற்காகவே மனிதப்பிறவி கொடுக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது. கடன் பிரச்சனை, குழந்தைகள் படிப்பு விஷயம், குடும்ப மனஸ்தாபம் அனைத்திற்கும் ஒரே பரிகாரம் செய்தால் போதும். அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

குடும்ப பிரச்சனை பணப் பிரச்சனை தீர

சிவன் இந்த பூவுலகின் தந்தையாக பார்க்கப்படுபவர். சிவ வழிபாடு அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும், அதனால் சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ஈசன், கெட்டவர்களை அழிப்பதோடு மட்டுமில்லாமல், நம் சிந்தைகளில் இருந்து கெட்டனவற்றை அழிக்கக்கூடியவர். தென்னாடுடைய சிவனை நினைத்து நாம் சில பரிகாரங்களை செய்வது மிகப்பெரிய நற்பலன்களை வாரி வழங்கும். ஆகையால் இந்த பரிகாரத்தை நாம் சிவன் ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும்.

சிவனுக்கு அபிஷேகம்

பரிகாரம் செய்வதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் மட்டும் தான் தேவை ஒன்று சர்க்கரை, மற்றொன்று 11 ஊதுவத்தி. சிவலிங்கங்கள் கோவிலுக்கு வெளிப்புறத்தில் தனியாக இருப்பது போல ஒரு கோயிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அங்கு செல்லும் முன் ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் கொண்டு சென்ற சர்க்கரையை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யுங்கள். நீங்கள் அபிஷேகம் செய்யும் பொழுது உங்களுக்கு இருக்கும் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அது தீர வேண்டும் என மனதாக வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் கொண்டு சென்ற ஊதுபத்தியை அங்கேயே சொருகி வைத்து விடுங்கள்.

இது மிகவும் எளிய பரிகாரம் தான் ஆனால் இதனை தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். எந்த நாளில் இந்த பரிகாரத்தை தொடங்குகிறீர்களோ அந்த நாளில் தான் செய்ய வேண்டும். அதாவது ஒரு வாரம் திங்கட்கிழமையன்று இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த வாரமும் திங்கட்கிழமை அன்றுதான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை செய்து சிவனின் அருளை பெற்று நல்வாழ்வை வாழுங்கள்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : கட்டுக்கட்டாக பணம், தங்கம் சேர அந்த காலத்தில் ராஜாக்கள் செய்த மிகவும் இரகசியான பரிகாரம்!!