Home ஆன்மிகம் வீட்டில் பணபுழக்கம் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள்...

வீட்டில் பணபுழக்கம் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும்!!

செல்வத்தை அள்ளி தரும் மகாலட்சுமி மற்றும் குபேரன் :

-விளம்பரம்-

வீட்டில் பணம் புழக்கம் அதிகரிக்க வேண்டும் மற்றும் பணவரவு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தெய்வங்களின் அனுகிரகம் மிகவும் முக்கியம். குபேரன் மற்றும் லட்சுமி தாயார் செல்வங்களின் அதிபதியாக விளங்குகின்றனர். அவ்விருவரையும் முறையாக வழிபட்டால் நம் வீட்டிலும் பணப்பிரச்சனை வராது என்கின்றனர் நம் முன்னோர்கள்.

அவர்களை முறையாக வழிபடுவதோடு அவர்களுக்கு உகந்த சில பொருள்களை வீட்டில் வைத்து பரிகாரம் செய்தால் பணம் நம் இருக்கும் இடம் தேடி வரும் என சொல்லப்படுகிறது. பணம் நம் வீடு தேடி வருவதற்கான பரிகாரத்தை தான் நாம் இந்த ஆன்மீக பதிவில் காண இருக்கிறோம்.

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் :

பச்சைக் கற்பூரத்தை தான் நாம் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த போகிறோம்.பச்சைக் கற்பூரத்தை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே மற்றும் பச்சை கற்பூரம் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தை பெற்ற ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையை! எந்த வீட்டில் பச்சை கற்பூரம் வாசனை வருகிறதோ அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வார் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. இப்படிப்பட்ட பச்சைக் கற்பூரத்தை நம் வீட்டில் வைத்து எப்படி பணவரவை ஈட்டுவது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இந்த பரிகாரத்தை தொடங்குவது குபேரனுக்கு உகந்த நாளான வியாழன் அன்று மாலை வேளையிலும் ஆரம்பிக்கலாம் அல்லது லட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை காலை சுக்கிர வேலையிலும் ஆரம்பிக்கலாம். இந்த பரிகாரத்தை தொடங்குவதற்கு ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள் சில்வர் தட்டைத் தவிர எந்த தட்டை வேணாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : 2 தலைமுறைக்கு தேவையான பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்கும் இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால்!

முதலில் ஒரு தட்டில் பச்சை கற்பூரம் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு ரூபாய் காசினை சுத்தமான பன்னீரில் நன்கு அலசி அந்த காயினை பச்சை கற்பூரத்தின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மேல் சந்தனத்தை பன்னிரால் குலைத்து பொட்டு வைத்து பின்னர் குங்குமமும் விட்டுக் கொள்ளுங்கள். இந்த தட்டை மகாலட்சுமி தாயார் படத்தின் முன் அல்லது குபேரர் படத்தின் முன் வைத்து வழிபட்டு வந்தால் பணவரவு குறை இல்லாமல் இருக்கும். வியாபாரம் செய்பவராக இருந்தால் அவர் தொழில் செய்யும் இடத்தில் வைத்து வழிபட்டு வந்தால் வியாபாரம் அமோகமாக நடக்கும். பண வரவும் நிலைத்து நிற்கும்.

-விளம்பரம்-

இப்படி செய்வதன் மூலம் பணவரவு குறை இல்லாமல் இருக்கும் ஏனென்றால் பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. ஆனால் இந்த பச்சை கற்பூரத்தை தினந்தோறும் மாற்றிவிட வேண்டும் தினமும் மாற்றும் இந்த பச்சை கற்பூரத்தை தண்ணீரில் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். அதில் இருக்கும் ஒரு ரூபாயை தினமும் குங்குமம் மற்றும் சந்தனம் இட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி செய்வதை வழக்கமாகவே கொள்ளும் போது இந்த பொருள்கள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயாரும் குபேரரும் நிரந்தரமாகவே வாசம் புரிந்து பணவரவை தாராளமாகி கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.