கர்ப்பபை கோளாறை போக்கி குழந்தை பாக்கியம் தரும் அரச மரம்!

- Advertisement -

அரசமரம் பெரும்பாலும் பிள்ளையார் கோவில்களில் இருக்கும். இந்து சாஸ்திரத்தில், அரச மரத்தின் அடியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வசிப்பதாக ஐதீகம். மும்மூர்த்திகளின் வடிவமாக உள்ள அரச மரத்துக்கு பூஜைகள் செய்வது, பிரதட்சணம் செய்வது, வணங்குவதால் பாவங்கள் விலகி அறிவு விருத்தி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆக, அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

குழந்தை பாக்கியம்

இயற்கையின் நியதிப்படி சூரியன் உதிக்கும் நேரம் முதல் காலை சுமார் 10 மணி வரை சூரியனின் கிரகணங்கள் அரச மரத்தின்மீது விழுவதால், அதிலிருந்து வெளிவரும் காற்று மனிதர்களின் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவேதான் காலை வேளைகளில் பூஜை, பிரதட்சணம், நமஸ்காரம் செய்ய வேண்டுமென்கிறது தர்ம சாஸ்திரம். குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் அரசமரத்திலிருந்து வெளியே வரும் சக்தி அதிகமாகக் காணப்படுவதால் அரச மரத்தை வலம் வந்தால் நன்மை கிடைக்கும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வழிபாடு பலன் தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சுற்றினாலும் பலன் கிடைக்கும்.

- Advertisement -

போதி மரம்

உடல், உள்ள சுத்தத்துடனும் பக்தியுடனும் அரச மரத்தை இரண்டு கைகளாலும் இறுக்கி அணைத்துக் கொண்டால் தீராத நோய்கள் தீரும் என்றும், அதனால் உடலும் உள்ளமும் வைரம்போன்று நல்ல வலிமை பெறும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது. நோய்களைப் போக்க இதை ஒரு சிறந்த பரிகாரமாகவும் கூறுகிறார்கள். அரச மரம் இந்துக்களுக்கு மட்டுமல்ல பவுத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தர் போதி மரத்தின் கீழே அமர்ந்து ஞானம் பெற்றதாகவே வரலாறு கூறுகிறது. அந்த போதி மரம் என்பது அரச மரம் என்ற உண்மை நமக்கெல்லாம் தெரியாத உண்மை. அரசு நிழலிருந்தோன்...' என்று சூடாமணி நிகண்டு கடவுள் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தர் ஞானம் பெற்றார்

நீண்டு நெடிது வளரக்கூடியதும் அழகான இலைகளைக் கொண்டதுமாக பரந்து விரிந்து காணப்படும் மரங்களில் மிகவும் உணர்வுப்பூர்வமான மரம் எது என்றால் அது அரச மரமே. அரச மரத்தில்தான் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகை அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம்தான் நாம் புத்திசாலியாக வளர உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்தவகையில் புத்தர் அரச மரத்தின் கீழே இருந்து ஞானம் பெற்றது தற்செயலான நிகழ்வல்ல. அதன் மகத்துவம் அறிந்தே அதன் கீழே அமர்ந்து ஞானம் பெற்றிருக்கிறார். குழந்தைப்பேறு அரச மரத்தைச் சுற்றி வருவதால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவேதான்,அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாள்…’ என்ற பழமொழி வழக்கத்தில் இருந்திருக்கிறது. இது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரச மரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதவிலக்கு சுழற்சி மட்டுமல்ல அது தொடர்பான பிரச்சினைகள் சீர் பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் `அரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்’ என்று கிராமங்களில் சொல்வார்கள்.

கருப்பைக்கோளாறு போக்கும்

அரச மரம் வெளிவிடும் காற்று கர்ப்பப்பையில் உள்ள பிரச்சினைகளைச் சரி செய்யும். அத்துடன் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டி மன அமைதியைக் கொடுக்கும். அரச மரத்தின் வேர், பட்டை, விதையை பாலில் கொதிக்க வைத்து ஆறியதும் தேனில் கலந்து தொடர்ந்து 48 நாள்கள் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களின் கருப்பைக் கோளாறுகளை நீக்கும். அரச இலைக் கொழுந்தை மையாக அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் ஆண், பெண் குழந்தைப்பேறின்மை பிரச்சினைகளைப் போக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here