Home ஆன்மிகம் சம்பளப் பணம் வந்தவுடன் இப்படி செலவு செய்தால் பணம் கையில் தங்குவதோடு வருமானமும் அதிகரிக்கும்!!

சம்பளப் பணம் வந்தவுடன் இப்படி செலவு செய்தால் பணம் கையில் தங்குவதோடு வருமானமும் அதிகரிக்கும்!!

மாத மாதம் ஏதாவது ஒரு விரைய செலவு வந்து விடுகிறதே என்ன செய்தால் அநாவாசிய செலவுகளைத் தவிர்க்கலாம் என்றும் பலரும் இன்றைக்கு யோசிக்கின்றனர். வாழ்க்கையில் வசதி, வாய்ப்புக்கள் அதிகரித்து, படிப்படியாக உயர வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் பல தொழில்கள் வரவுக்கும், செலவுக்கும் சரியாக உள்ளது. மாத வருமானம் பெறுவோரின் நிலையும் இதுவாகவே உள்ளது.

-விளம்பரம்-

கையிலே வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியலை என்று மாத சம்பளதாரர்கள் பலர் பாடிக் கொண்டிருப்பார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தினசரி வருமானமும், மாத சம்பளம் பெறுபவர்களுக்கு மாத வருமானம் பெருக வேண்டும். வீண் விரைய செலவுகளைத் தவிர்த்து சுப விரைய செலவாக மாற்ற சில வழிகள் உள்ளன. வருமானத்தை இப்படி பயன்படுத்தினால் அந்த வருமானம் அதிகரிப்பதோடு பணம் வீண்விரயமாகாமல் கையில் தங்கும். அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் வாங்கியவுடன் செய்ய வேண்டியவை

அருகம்புல் மாலை

முழுமுதற் கடவுளாக விளங்கக் கூடியவர் விநாயக பெருமான். எந்த காரியத்திலும் தொடக்கமாக விளங்கக் கூடியவர் இவர்தான். பொதுவாக கேதுவால் தோஷம் ஏற்பட்டாலும் கையில் பணம் தங்காது என்று சொல்வார்கள். அதற்கு விநாயகரை வழிபட வேண்டும். கையில் பணம் தங்க, எல்லையில் உள்ள விநாயகர் கோவிலில் சம்பளம் வாங்கியவுடன் அந்த பணத்தில் விநாயகருக்கு எள் படைத்து, தேங்காய் உடைத்து வழிபடலாம் அல்லது இவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு செய்வதால் செலவுகள் குறைந்து நினைத்தது நிறைவேறும்.

கோ தானம்

கோ தானம் இடுபவரை வெய்யில் வறுத்தினாலும் வறுமை தீண்டாது என்பது முன்னோர்கள் கூற்று. தானங்களில் பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசுவை நாம் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கிறோம். ஆகையால், உங்கள் கையால் பசு மாட்டிற்கு எள்ளு, புண்ணாக்கு, கீரை, பழங்கள் வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். இதன்‌ மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைத்து வீட்டில் பணம்‌ தங்கும்.

அனுமனுக்கு வெற்றிலை மாலை

ஆஞ்சநேயரை தொடர்ந்து வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டு வந்தால், பண கஷ்டம் நீங்கும் அதனுடன், வேண்டுவதெல்லாம் கிடைக்கப் பெறலாம். அதேபோல், துளசி மாலையும், வடை மாலையும் சார்த்தி வேண்டிக்கொண்டால் வேலை செய்யும் இடத்தில் காரியங்களை வீரியமாக்கி வெற்றியைக் கொடுக்கும்.

-விளம்பரம்-

மல்லிகை பூ

சம்பளம் வாங்கியவுடன் குண்டு மல்லி வாங்கி துர்க்கைக்கு சாற்றினால் வருமானம் நிச்சயம் பல மடங்கு உயர்வதோடு கையில் பணம் எப்போதும் தங்கும்.

பாம்புக்கு பால்

இந்துக்கள் பாம்பை தெய்வமாக வழிபடுவது வழக்கம். இதனால் பல நூறு ஆண்டுகளாக பாம்பு புற்றில் பால் ஊற்றுவது, முட்டை வைப்பது போன்ற பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது. அதேபோல் நாமும் பாம்பு புற்றிற்கு பால் வைத்தால் வருமானம் அதிகரித்து செலவுகள் குறையும். நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆதரவற்ற இல்லங்களுக்கும், வீதியில் யாசகம் கேட்டு வருபவர்களுக்கும் உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்ய வேண்டும். இந்த தானத்தையெல்லாம் நீங்கள் பணமாக செய்யாமல் உணவாக செய்தால் சிறப்பான பலனை பெறுவீர்கள்.

இதனையும் படியுங்கள் : உங்கள் வருமானம் உயர வேண்டுமா ? பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? தென்கிழக்கு திசையில் இந்த பொம்மை மட்டும் வையுங்கள் போதும்!

-விளம்பரம்-