Home ஆன்மிகம் தமிழ் புத்தாண்டு‌ அன்று‌ இந்த 3 பொருட்கள் வாங்கினால் மட்டும் போதும்,செல்வ செழிப்பை பெருகிக் கொண்டே...

தமிழ் புத்தாண்டு‌ அன்று‌ இந்த 3 பொருட்கள் வாங்கினால் மட்டும் போதும்,செல்வ செழிப்பை பெருகிக் கொண்டே வரும்!

சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்க உள்ளது. இந்த ஆண்டும் பலருக்கும் நன்மை நடைபெறும் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாத பிறப்பிலும் ஒவ்வொரு பொருளை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் அந்த பொருள் பெருகிக் கொண்டே வரும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை. அந்த விடயம் தமிழ் புத்தாண்டுக்கும் பொருந்தும். ஆம் தமிழ் புத்தாண்டின் போது நீங்கள் வாங்கும் பொருட்கள், அந்த வருடம் முழுவதும் நீங்காத செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

-விளம்பரம்-

சித்திரை மாத பிறப்பு என்பது மங்கலங்களின் பிறப்பாக கருதப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உள்ளது. வருடம் முழுவதும் செல்வங்கள் சேர்ந்து கொண்டே இருக்க தமிழ் புத்தாண்டு தினத்தன்று சில குறிப்பிட்ட பொருட்களை வாங்கி, நம்முடைய வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். தமிழ் புத்தாண்டு அன்று முதல் செலவாக இந்த பொருட்களை வாங்கி வைப்பதால் அந்த ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆன்மீகப் பதிவில் தமிழ் புத்தாண்டு அன்று என்ன‌ பொருட்கள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.‌

கல் உப்பு

அனைவருக்குமே தெரியும் கல் உப்பு மங்கள பொருட்களில் ஒன்றாகவும், மஹாலக்ஷ்மியின் அம்சமாகவும் கருதப்படும் பொருட்களில் ஒன்று. வீட்டில் குறையாமல் இருக்க வேண்டிய பொருட்களில் ஒன்று கல் உப்பு ஆகும். ஆகையால், வருடத்தின் முதல் நாள் அன்று இந்த பொருளை வாங்குவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். செல்வ செழிப்பு உண்டாக்குவதில் கல் உப்பு முக்கியான பொருள் ஆகும். ஆகையால், கல் உப்பை வாங்கி கட்டாயமாக பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இது பணவரவை மட்டுமின்றி, வீட்டின் எதிர்மறை ஆற்றலையும் விரட்டுகின்றது.

அதுமட்டுமல்லாமல் புத்தாண்டு அன்று‌ நாம்‌ வாங்கிய உப்பை பூஜை செய்து முடித்த பின் உப்பு ஜாடியில் கொட்டி விட்டு அதனுள் வசம்பை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்த வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழலாம். வீட்டில் மகாலட்சுமியின் அருளும் நிறைந்திருக்கும்.

மல்லிகை பூ

இந்த புத்தாண்டு நாளில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும் அதனால் வீட்டில் உள்ளவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னறே பூக்களை வாங்கி வைத்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது, புத்தாண்டு அன்று‌ சிறிதளவு மல்லிகை பூவினை கட்டாயம் வாங்க வேண்டும். புத்தாண்டு தினத்தன்று மகாலட்சுமிக்கு மல்லிகை மலர் அல்லது வாசனை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் மல்லிகை பூ வாங்கி மகாலட்சுமி தாயாருக்கு சாற்றினால் வருமானம் நிச்சயம் பல மடங்கு உயர்வதோடு கையில் பணம் எப்போதும் தங்கும்.

-விளம்பரம்-

விரலி மஞ்சள்

ஜோதிடத்தின் படி, மஞ்சள் மங்களத்தை தரக் கூடிய பொருள். இது குரு பகவானுடன் தொடர்புடையது. எனவே எப்போதும் ஒரு துண்டு மஞ்சள் நம் வீட்டில் வைத்திருப்பதால் நம்முடைய வலிமையை அதிகரிக்கும். விரலிமஞ்சள் இல்லாத வீடு அதிர்ஷ்டம் இல்லாத வீடாக தான் இருக்கும். வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக இரண்டு விரலிமஞ்சள் 2 ஆவது இருக்க வேண்டும். இந்த மஞ்சளை புத்தாண்டு அன்று‌ வாங்கி வைத்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டுதல், வீட்டின் குறைபாடு சரிசெய்தலுக்கு உதவியாக இருக்கும்.வாங்கி வைத்த இந்த பொருட்களை எல்லாம் நம் வீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டில் இப்பொழுது சொன்ன மூன்று பொருட்களையும் வாங்கி வைத்து விட்டு புத்தாண்டு அன்று கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து வாருங்கள். உங்களுக்கு செல்வம் பன்மடங்கு பெருகும். வீட்டில் எந்த பிரச்சனையும் வராமல் தமிழ் புத்தாண்டு உங்களுக்கு நல்ல ஒரு ஆண்டாக செல்வத்தை வாரி வழங்கக் கூடிய ஒரு ஆண்டாக அமையும்.

இதனையும் படியுங்கள் : பதினாறு செல்வங்களும் கிடைக்க சித்திரை திருநாள் அன்று வழிபாடு செய்ய வேண்டிய நேரம்!

-விளம்பரம்-