Home ஆன்மிகம் உங்கள் சமையலறையில் இந்த 8 பொருட்கள் மட்டும் வையுங்கள், செல்வம் மலை போல் சேரும்!

உங்கள் சமையலறையில் இந்த 8 பொருட்கள் மட்டும் வையுங்கள், செல்வம் மலை போல் சேரும்!

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதும், தரித்திரம் சூழ்வதும் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதில் அது அடங்கியுள்ளது. நாம் நமது வீட்டில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயங்கள் நமது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் லக்ஷ்மி கடாட்சத்துடன் சுபீட்சமாக இருக்க, நோய் நொடி இல்லாமல், வறுமை இல்லாமல், மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருக்க வீட்டின் அமைப்பானது சரியாக அமைந்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-

ஒரு வீட்டில் பூஜை அறை முதன்மையானது, அடுத்ததாக பார்க்க வேண்டியது சமையலறை தான். அதன்படி ஒரு வீட்டின் பொருளாதார நிலை, அதிர்ஷ்டம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் மிக முக்கியமான இடங்களில் ஒன்று சமையல் அறை. இங்கு சில குறிப்பிட்ட பொருட்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. ஒருவேளை மறந்து போய் அந்த பொருட்களை சமையல் அறையில் வைக்க வில்லை என்றால் அந்த வீட்டில் துரதிஷ்டம், பண இழப்பு, வீண் செலவு, நஷ்டம் ஆகியவை வந்து சேரும் என வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது. அப்படி எந்தெந்த முக்கியமான 8 பொருட்களை மறந்தும் கூட சமையல் அறையில் வைக்க மறக்க கூடாது என்பதை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை

பழங்காலத்திலிருந்தே பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய மசாலா பொருட்களில் இலவங்கப்பட்டை முக்கியமான ஒன்று. பல உணவுகள் மற்றும் சமையல் வகைகளில் ஒரு மூலப்பொருளாக இலவங்கப்பட்டை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமையல் பயன்பாடுகளை தவிர பலவேறு ஆன்மிகக் குணங்களை கொண்டுள்ளது இந்த அற்புத மசாலா. சமையலறையில் நாம் எப்போதும் இலவங்கப்பட்டை வைத்திருந்தால் நம்முடைய கையில் பணம் தாராளமாக புரளும்.

பிரியாணி இலை

நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் பிரியாணி இலை. இதற்கு நல்ல நறுமணம் வீசும் தன்மை உண்டு. இந்த இலையானது சமையலுக்கு வெறும் ருசியை மட்டும் கொடுக்கவில்லை நம்முடைய வாழ்க்கைக்கும் தான் சேர்த்து கொடுக்கிறது. இந்த பிரியாணி இலைகளை வீட்டில் எரித்து, அந்த புகையை வீடு முழுவதும் காண்பித்தால் எதிர்மறை ஆற்றல்கள் விலகி உங்களுடைய வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும். அதோடு பிரியாணி இலையின் புகையை சுவாசிக்கும் போது அது பல பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

துளசி

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம், அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொருட்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி தான். எந்த இடத்தில் துளசி இருக்கிறதோ அங்கு சகல சௌபாக்கியமும் நிறைந்திருக்கும். இது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

-விளம்பரம்-

ஏலக்காய்

மகாலக்ஷ்மியின் அம்சம் சில பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதில் ஏலக்காயும் அடங்கும். இதை சமையலுக்கு பயன்படுத்துவதால் சாதாரண பொருள் ஆகிவிடாது. இந்த ஏலக்காயை சமையலறையில் மட்டுமல்லாமல் பூஜையறையில் வைத்தால் ஒரு பக்கம் பணம் வந்து கொண்டே இருக்கும். அதேநேரம் எதிர்பாராமல் உண்டாகும் செலவுகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பச்சை கற்பூரம்

இந்த பச்சைக் கற்பூரத்தை நம் முன்னோர்கள் முக்கிய பொருளாக ஆன்மீக ரீதியில் கண்டார்கள். இந்த பச்சை கற்பூரத்தை பூஜை அறை மற்றும் சமையலறையில் வைத்தால் வீட்டில் பணகஷ்டம் இல்லாமல் இருக்கும். இதை பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, அஞ்சறைப் பெட்டி போன்ற இடங்களில் வைக்கலாம். அதுபோலவே, பச்சை கற்பூரம் இயற்கையாகவே நேர்மறை ஆற்றலைக் கொடுக்கும். மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், கண்திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றலை நீக்க இந்த பச்சை கற்பூரம் உதவுகிறது.

இஞ்சி

நம் உடலில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை போக்கக்கூடிய மருத்துவம் கொண்ட இந்த இஞ்சிக்கு உண்டு. அதேபோல் நம்முடைய வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றல்களையும்‌ வெளியேற்றும் தன்மையும் இதற்கு உண்டு என்று சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

ஜாதிக்காய்

ஜாதிக்காய் எல்லோருக்கும் தெரியும். இந்த ஜாதிக்காய்க்கு அதிகமான மருத்துவ குணம் உள்ளது. அதற்கு ஈடான மகத்துவமும் இருக்கிறது. அந்த காலத்திலேயே செல்வ வளம் அதிகரிக்க இந்த ஜாதிக்காயை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். இதனை நம்‌ பூஜை அறையில் வைத்தால் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க பணம் வைக்கும் பெட்டியில் எப்போதும் ஒரு ஜாதிக்காயை வையுங்கள்.

கிராம்பு

இந்துக்களின் பல்வேறு வித வழிபாடுகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் கிராம்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இயற்கையாகவே கிராம்பு தீய சக்திகளை விரட்டவும், கண் திருஷ்டியை போக்குவதற்கும் ஒரு நேர்மறையான ஆற்றலை கொடுப்பதாகவும் நம்பப்படுகிறது. அதனால் இதனை எப்போதும் நம் சமையலறையில் வைத்திருப்பது நல்லது.

இதனையும் படியுங்கள் : சமையலறையில் இந்த டப்பாவில் மட்டும் பணம் போட்டு வையுங்கள்! பணம் தானகவே வீடு தேடி வரும்!