வேண்டுதல்கள் உடனே நிறைவேறி பணமழை பொழிய இந்த ஒரு வெற்றிலை மட்டும் போதும்!

- Advertisement -

பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே வசதி படைத்தவர்களாக, அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது. அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும்.

-விளம்பரம்-

ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர வித்தை கடைசிவரை தெரியாமலேயே போகின்றது. ஒரு ரூபாயைக் கூட எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளாதவர்கள் கையில் கூட, பணம் சேரும். வருமானம் இல்லாதவர்களுக்கு கூட வருமானம் தானாக தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு கூட, தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக லாபத்தை பெற முடியும். அதற்கான ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

வெற்றிலை

வெற்றிலை என்பது தாம்பூலத்திற்கும், விஷேச வீடுகளில் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிடவும் பயன்படுத்துகிறோம். வெற்றிலை மருத்துவ குணம் நிறைந்த பொருளாகவும் உள்ளது. வெற்றிலையை கொண்டு பரிகாரமும் செய்யலாம் என்பது தெரியாத விஷயம். ஒரு வெற்றிலை இருந்தால் போதும் உங்கள் துன்பங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட முடியும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு மூன்றே பொருட்கள் தான் தேவை. அவை வெற்றிலை, தேங்காய் எண்ணெய்‌ மற்றும் பச்சை கற்பூரம். ஒரு சிறிய தாம்பூலத் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தட்டின் மேல் ஒரு வெற்றிலையும் அதனமேல் ஒரு பச்சை கற்பூரத்தையும் வைத்து விடுங்கள். பச்சை கற்பூரத்தின் மேல் ஒரு சொட்டு மட்டும் தேங்காய் எண்ணெயை விடுங்கள். பிறகு இந்த தட்டை பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்றி விடுங்கள். இப்படி தீபம் ஏற்றும் பொழுது தெய்வத்திடம் நாம் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேறிவிடும். இந்த தீபத்தை நாம் தினந்தோறும் ஏற்ற வேண்டும்.

இதனை நாம் தினந்தோறும் செய்து வரும் பொழுது நமது வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். இதனால் நமது வீட்டில் எந்த எதிர்மறை ஆற்றல்கள் இருந்தாலும் நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல் நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், நோய் நொடிகள் எதுவும் அண்டாது, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இந்த மூன்றையும் வைத்து விளக்கு ஏற்றும் பொழுது நமது குடும்பத்தில் நல்லவைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். வெற்றியை தரக்கூடியது இந்த வெற்றிலை அதுமட்டுமல்லாமல் பச்சை கற்பூரமும் தேங்காயும் மகாலட்சுமி உகந்த பொருளாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தேங்காய் எண்ணெய் விநாயகருக்கு உகந்த பொருளாக கருதப்படுவதால் இதனை நாம் பயன்படுத்தும் பொழுது அவருடைய அருளும் பரிபூரணமாக கிடைக்கும். இது மூன்றையும் ஒன்றாக நாம் பயன்படுத்தும் பொழுது நம் வீட்டில் பல நல்ல மாற்றங்கள் நிகழும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை நாம் செய்து வரும் பொழுது சிறிய காரியமாக இருந்தாலும் அது வெற்றி பெறும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய அவசியம் நாம் கடை பிடிக்க வேண்டியவை!!