இன்றைய காலகட்டத்தில் பணம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று என்றே சொல்லலாம் பணம் இருந்தால் தான் நம்மால் இந்த உலகத்தில் வாழவே முடியும். நம்மிடம் பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மை யாருமே மதிக்க மாட்டார்கள். அதனால் அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறோம் ஆனால் ஒரு சிலரிடம் அந்த பணம் தங்குவது கிடையாது நிறைய விரயச் செலவுகள் ஆகிக்கொண்டே இருக்கும்.

அந்த பணம் நம்முடைய வீட்டில் தங்குவதற்கு கடவுளின் அனுக்கிரகம் நமக்கு தேவை. அதற்காக நாமும் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும் சிறிய நாணயங்கள் ஆங்காங்கே இருந்தால் அதனை எடுத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் இதுவே மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் அது மட்டுமில்லாமல் இப்படி நாம் செய்வதால் லட்சுமியின் அனுகிரகத்தை சுலபமாக பெற முடியும்.
வீட்டில் பணம் தங்குவதற்கு செய்ய வேண்டியவைகள்
அறையில் ஒரு சங்கை எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும் அதிலும் கடலில் கிடைக்கின்ற சங்கு லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த பொருட்களை நாம் வீட்டில் வைத்திருக்கும் போது அதனை யாருக்கும் தெரியாமல் மிகவும் கவனமாக பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இப்படி நாம் சங்கை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் பணம் அதிக அளவில் தங்கும்.

வீட்டில் அரிசி குறைவின்றி இருக்க வேண்டும் பூஜை அறையிலும் சிறிதளவு அரிசியில் சிறிய அன்னபூரணி சிலையை வைக்க வேண்டும். இப்படி நாம் செய்வதால் நம்முடைய வீட்டில் விரய செலவுகள் குறைந்து வீட்டில் பண வரவு எப்பொழுதுமே அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
பணவரவு மட்டும் அதிகரிப்பதுடன் இல்லாமல் விரைய செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகமாகும் நிறைய செலவுகள் வந்தாலும் கூட பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் வீட்டில் பண வரவு இருக்கும்.
இதனையும் படியுங்கள் : பணம் வீடு தேடி வர மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க செய்ய வேண்டியவைகள்


