இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க.
நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.. அந்த வகையில் கற்றாழை சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. இது இட்லி, தோசைக்கு டேஸ்ட்டாக இருக்கும். கற்றாழை ஒரு பழங்கால மருத்துவ தாவரம், அதன் சிகிச்சை பண்புகளுக்காக உலகம் முழுவதும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இது பல நூற்றாண்டுகளாக, பல கலாச்சாரங்களில் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடிப்பது, உடல் எடையை குறைக்கவும், உங்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தவும், குடல் செயல்பாட்டை எளிதாக்கவும் ஒரு சிறந்த வழியாகும். மேலும் கற்றாழை சாறு பல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கற்றாழையில் வைட்டமின், தாதுக்கள், என்சைம்கள், சபோனின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.இந்த கற்றாழையில் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கற்றாழை சட்னி | Aleovera chutney recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கற்றாழை
- 1 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் உளுந்து
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 4 பல் பூண்டு
- 5 காய்ந்த மிளகாய்
- 1 பெரிய வெங்காயம்
- 1/4 கப் தேங்காய்
- புளி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- எண்ணெய் தேவையான அளவு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்து
- 2 காய்ந்த மிளகாய்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் கற்றாழையை நன்கு தோல் சீவி அதன் உள்ளிருக்கும் ஜெல்லி பகுதியை மட்டும் எடுத்து அதனை தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து தனியா, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இவை வதங்கியதும் அத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் இதனை நன்றாக ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
- பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் ஊற்றி கலந்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கற்றாழை சட்னி தயார்.