- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
வித்தியாசமா தினமும் ஏதாவது செஞ்சு சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு நினைப்பாங்க. அந்த வகையில இந்த மாதிரி ஒரு சூப்பரான கறி அடை செய்து பாருங்கள். இந்த கறி அடை செய்வதற்கு நமக்கு மீதமான சிக்கன் கிரேவி போதுமானது. சிக்கன் கிரேவி மட்டுமில்லாமல் மட்டன் கிரேவி கூட சேர்த்து செய்யலாம். அரிசி மாவு தேங்காய் துருவல் இதெல்லாம் சேர்த்து செய்யும் போது டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
அடைக்கு மாவு பிசையும் போது தேங்காய் பால் ஊத்தி பிசைந்தால் டேஸ்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாத்துட்டீங்கன்னா அவ்வளவு சூப்பரா இருக்கும் சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். கிரேவி ரொம்ப ரொம்ப குறைவான அளவில் இருந்துச்சுன்னா இந்த மாதிரி ஒரு அடை ரெசிபி செஞ்சா போதும் நிறைய பேரு நிறைய அளவுகளில் சாப்பிடலாம். சுவையான இந்த ரெசிபிக்கு வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க இப்ப நம்ம சிக்கன் கிரேவி எடுத்து செஞ்சிருக்கோம் ஆனா உங்க வீட்ல மட்டன் கிரேவி மீதம் இருந்துச்சுன்னா அதை வச்சு கூட செஞ்சிடுங்க.
அடைக்கு மாவு பிசைந்து விட்டு மூணு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊற வச்சுக்கோங்க அப்பதான் நல்லா ஊறி அடை நல்லா சாஃப்டா வரும். மூணு மணி நேரம் ஊற வெச்ச பின்னாடி மாவு கெட்டியா இருந்துச்சுன்னா மறுபடியும் தேங்காய் பால் ஊத்தி பிசைந்து அடை செய்யலாம். ஒரு தடவை மட்டும் இதை செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் உங்க வீட்ல கிரேவி மீதம் இருந்துச்சுன்னா கண்டிப்பா இதுதான் செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான கறி அடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
Ingredients
Method
சிக்கன் கிரேவியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிக்கனை கையால் நன்கு மசித்து கொள்ளவும்.
அதில் முட்டை சேர்த்து கலந்ததும் அரிசி மாவு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய் பால் சேர்த்து அடை பதத்திற்கு பிசைந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து மாவை அடை போல் ஊற்றி நன்கு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கறி அடை தயார்.






