Home உடல்நலம் உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறதா ? அப்போ இதை செய்யுங்கள்.

உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறதா ? அப்போ இதை செய்யுங்கள்.

இன்றைய காலகட்ட மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றுதான் தலை முடி உதிர்வது. இது என்ன அவ்வளவு பெரிய பிரச்சனையா என்று கேட்டால் ? ஆம், இதனுடைய வலி உங்களுக்கு தெரியாத தலை முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் முடி உதிர்வது எவ்வளவு கடினமான விஷயம் என்று. முடி உதிர்வது மட்டும் தான் பிரச்சனை என்று கேட்டால் அதையும் தாண்டி தலைமுடி கருநிறமாக இல்லை முடி அதிகமாக வளரவில்லை இது போன்று பல பிரச்சனைகள் இருக்கின்றது. இதற்கு ஒரு தீர்வாக வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான மற்றும் எளிமையான மூலிகை எண்ணெய் எப்படி தயாரிக்கலாம், தேவையான பொருட்கள், செய்முறைகள் மற்றும் அதனுடைய மருத்துவ குணங்கள் போன்றவற்றை இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

தேவையான பொருட்கள் :-

250ml -சுத்தமான தேங்காய் எண்ணெய்
2டீஸ்பூன் -வெந்தயம்
2டீஸ்பூன் -கருஞ்சீரகம்
50கிராம் -வேலம் பட்டை

செய்முறை 1 :-

முதலில் ஒரு பாத்திரத்தில் 250ml சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

செய்முறை 2 :-

அதன் பின்பு தேங்காய் எண்ணெயுடன் 2 டீஸ்பூன் அளவிலான வெந்தயத்தையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு கருஞ்சீரகம் ஒரு 2 டீஸ்பூன் அளவில் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்

செய்முறை 3 :-

-விளம்பரம்-

அதன் பிறகு வேலம் பட்டை, இது மட்டும் நாட்டு மருந்து கடைகளில் வாங்க வேண்டும் 50 கிராம் வேலம் பட்டையை வாங்கிக் கொள்ளுங்கள்.

செய்முறை 4 :-

வாங்கி வைத்துள்ள வேலம் பட்டையை சிறுது சிறிதாக நொறுக்கி அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் இப்போது தேங்காய் எண்ணுடன் நாம் சேர்த்துள்ள பொருட்களை 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் ஓரமாக வைத்து விடுங்கள்.

செய்முறை 5 :-

8 மணி நேரங்கள் கழித்து அந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெய் சிவப்பு நிறமாக மாறி இருக்கும் வேலம் பட்டையில் உள்ள சத்துக்கள் அனைத்தும் எண்ணெயுடன் கலந்து இருக்கும் நிலையில் மேலும் அதில் நாம் போட்டிருக்கும் பொருட்களை சத்துக்கள் எண்ணையுடன் சேர்வதற்காக.

செய்முறை 6 :-

ஒரு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து பாதி அளவு தண்ணீரை ஊற்றி தண்ணி சூடு ஏறும் வரை காத்திருக்கவும். நாம் நேரடியாக எண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றினால் எண்ணெயில் உள்ள சத்துக்கள் எல்லாம் ஆவியாக வெளியேறிவிடும் ஆகையால் இம்முறையில் என்னையே சூடேற்றவும்.

செய்முறை 7 :-

தண்ணீர் சுடானவுடன் எண்ணெய் வைத்துள்ள பாத்திரத்தை அப்படியே கடாயில் இறக்கி தண்ணீரில் மிதந்தவாறே வைத்து என்னையை கலக்கி விடவும்.

செய்முறை 8 :-

இப்படி செய்கையில் அந்த பொருட்களை உள்ள சத்துக்கள் மேலும் எண்ணெய்யுடன் கலந்து விடும் என்னை இளம் சூடாக இருக்கும் போது இறக்கி விட்டுங்கள்.
இப்போது எண்ணெய் முழுவதுமாக தயாராகிவிட்டது இதை நீங்கள் இரண்டு இரண்டு மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மருத்துவ குணங்கள் :-

இப்படி வீட்டிலேயே தயார் செய்த எண்ணெயை நீங்கள் முடிக்கு தேய்ப்பது உடன் இல்லாமல் உங்கள் கை காலில் நரம்புகள் சுருண்டு இருக்குது என்றால் அந்த இடத்தில் இந்த எண்ணெயை தேய்த்து நீவி விட்டால் நரம்பு சுருக்கங்களும் எளிமையாக போய்விடும்.

அது மட்டும் இல்லாமல் நாம் இந்த எண்ணெயை வெந்தயம் சேர்த்துள்ளதால் வெந்தயத்தின் முக்கிய பயன்பாடு அது மிகவும் குளிர்ச்சியான பொருள் ஆகையால் நம் தலையில் இந்த எண்ணெய்யை தைப்பது மூலம் நம் தலையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் கருஞ்சீரகம் சேர்த்து இருப்பதால் உங்களது முடி கருமையாக இல்லை என்ற பிரச்சினை வருகிறது ஆனால் கருஞ்சீரகத்தின் உதவியுடன் உங்கள் முடி கருகருவென நிறம் மாறும் இது எல்லாம் சேர்த்திருக்கும் இல்லம் வேலம் பட்டை உங்கள் முடி குறைவாகஉள்ள இடத்தில் அப்ளை செய்யும்போது அந்த இடத்தில் முடியின் வேர்களில் சென்று உங்களுக்கு முடியை வளர வைக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here