இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடக் கூடிய வகையில் ஒரு அட்டகாசமான தோசை ரெசிப்பி பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆம் இன்று மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் பார்க்கப் போகிறோம் மரவள்ளி கிழங்குகள் அதிகமாக விளையும் சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் பொழுது இதுபோன்று இந்த மரவள்ளி கிழங்கு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால்
அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் ஒன்று சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்கும். அதனால் இன்று இந்த மரவள்ளி கிழங்கு தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மரவள்ளிக்கிழங்கு தோசை | Maravalli Kilangu Dosai Recipe in Tamil
இன்று மரவள்ளி கிழங்கு தோசை பற்றி தான் பார்க்கப் போகிறோம் மரவள்ளி கிழங்குகள் அதிகமாக விளையும் சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் பொழுது இதுபோன்று இந்த மரவள்ளி கிழங்கு தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் ஒன்று சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் மொறுமொறுப்பு தன்மையுடன் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 20 minutes
Advertisement
mins
Cook Time 20 minutesmins
Total Time 40 minutesmins
Servings 4people
Calories 105
Equipment
1 மிக்ஸி
1 தோசை கல்
Ingredients
¼KGமரவள்ளிக்கிழங்கு
½கப்அரிசி
5வர மிளகாய்
1tbspசோம்பு
7பல்பூண்டு
¾tbspஉப்பு
1பெரிய வெங்காயம்பொடியாக நறுக்கியது
¼tbspபெருங்காய தூள்
1சிட்டிகைமஞ்சள் தூள்
1கைப்பிடிகொத்தமல்லிபொடியாக நறுக்கியது
Instructions
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் அரிசி எடுத்து இரண்டு முறை நன்கு அலசி கொண்டு. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு தேவையான அளவு மரவள்ளி கிழங்குகளை எடுத்துக்கொண்டு அதன்
Advertisement
மேற்புற தோலை சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் மரவள்ளி கிழங்கை நறுக்காமல் துருவி எடுத்து கொள்ளுங்கள்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய், சோம்பு, பூண்டு பற்கள் மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் நாம் ஊறவைத்த அரசியையும் தண்ணீர் இல்லாமல் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் கடைசியாக இதனுடன் நான் துருவி வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள் பின் நாம் அரைத்து வைத்திருக்கும் கிழங்கை ஒரு பெரிய பவுளில் சேர்த்து கொள்ளவும்.
பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
பின் மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கல் சூடாக ஏதும் இரண்டு கரண்டி மாவு எடுத்து கல்லில் ஊற்றவும்.
பின் தோசை இரண்டு புறமும் வெந்ததும் எடுத்துக் கொள்ளுங்கள் இவ்வாறு மீதம் இருக்கும் மாவையும் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மரவள்ளிக்கிழங்கு தோசை தயாராகிவிட்டது.