மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வகையில் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் நாகூர் வாடா சாப்பிட்டு இருக்கீங்களா? நாகூர் வாடா மிகவும்
இதையும் படியுங்கள் : சுவையான கொச்சி இறால் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!
அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகூர் வாடா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நாகூர் வாடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
நாகூர் வாடா | Nakur Vada Receipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 cup பழைய சோறு
- ½ cup அரிசி மாவு
- 10 பிரான்
- 1 cup ரவை
- 2 வெங்காயம்
- 20 கருவேப்பிலை
- 5 பச்சை மிளகாய்
- 1 cup துருவியது தேங்காய்
- ¼ tsp சோடா உப்பு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
- நாகூர் வாடா செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி பிராணை சிறிது உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் பழைய சோற்றை நன்றாக வடித்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அரிசி, ரவை, சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- கலவையை சிறிது நேரம் ஊற விட வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
- வெங்காயம் வதங்கிய பின்னர் தேங்காய் துருவலை அதில் போட வேண்டும். வெங்காய கலவையை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி கலவையை பிளாஸ்டிக் கவரில் உளுந்த வடை போல் தட்டி அதில் உங்களுக்கு தேவையான அளவு பிரானை வைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- எண்ணெயில் பொரித்து எடுத்ததும் தனியே எடுத்து வைக்க வேண்டும்.பின்னர் வெங்காய கலவையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.இப்பொழுது சுவையான நாகூர் வாடா தயார்.