மனநோய், தூக்கமின்மை பிரச்சினைகளை தீர்க்கும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை!

- Advertisement -

ஜாதிக்காய் கேள்விப்பட்டிருப்பீங்க. நாட்டு மருந்துக்கடைகள்ல கேட்டா கிடைக்கும். அஞ்சறைப்பெட்டி மருத்துவத்துல ஜாதிக்காய்க்கும் இடம் உண்டு. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்குற உரை மருந்துல இந்த ஜாதிக்காயும் இருக்கும். கடுக்காய், மாசிக்காய்னு வேற சில பொருள்களோட ஜாதிக்காயையும் சேர்த்துக் கொடுப்பாங்க. இதை குறிப்பிட்ட வயசு வரைக்கும் கொடுத்துட்டு வந்தா குழந்தைகள் நோய் நொடியில்லாம வளருவாங்க.

-விளம்பரம்-


முதுமை தடுக்கும்


மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், வைட்டமின் பி 1, வைட்டமின் பி 6 சத்துகள் இதுல இருக்கு. காரத்தன்மையும், துவர்ப்புத்தன்மையும் உள்ள ஜாதிக்காயை முறைப்படி சாப்பிடணும். சூடு அதிகம் உள்ள மூலிகைங்கிறதால அனுபானமா பால் சேர்த்துத்தான் சாப்பிடணும். கொஞ்சம் இனிப்புச்சுவையோட வித்தியாசமான நறுமணம் வீசும். இதுக்கு என்ன காரணம்னா அதுல மைரிஸ்டிசின்னு ஒரு சத்து இருக்கு. இது முதுமை வராம பாதுகாக்க உதவும்.

- Advertisement -


தூக்கமின்மை போக்கும்


பொதுவா ஜாதிக்காய்க்கு நிறைய மருத்துவ குணம் உண்டு. மசாலாப்பொருளா மட்டுமில்லாம தூக்கமின்மை பிரச்சினைக்கு ஜாதிக்காய் நல்லாவே வேலை செய்யும். இன்னைக்கி சூழல்ல தூக்கமின்மையால அவதிப்படுற பலபேர் இருக்காங்க. இதுக்கு என்னென்னவோ மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் கிடைக்காம ரொம்ப மனக்கஷ்டத்துல இருக்காங்க. அப்படிப்பட்டவங்க ஜாதிக்காயை அரைச்சி பொடியாக்கி அரை டீஸ்பூன் எடுத்துபசும்பால்ல கலந்து ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சூடா குடிக்கணும். இந்தமாதிரி சாப்பிட்டா தூக்கமின்மை மட்டுமில்லாம நரம்பு பிரச்சினைகளும் சரியாயிரும்.


ஆண்மைக்குறைக்கு அற்புத மருந்து


மனநோயையும் நரம்பு சம்பந்தமான நோய்களையும் சரிபண்ணக்கூடியது ஜாதிக்காய். அதுமட்டுமில்லாம மனசை உற்சாகப்படுத்தக்கூடியது. அதனால சிலபேர் இதை போதைப்பொருள்னு சொல்வாங்க. அப்பிடி இல்லன்னாலும் அளவுக்கு மீறி சாப்பிட்டா அது வேற சில பிரச்சினைகளை உண்டாக்கிரும். ஏற்கெனவே சொன்னமாதிரி உடம்புல வெப்பத்தை உண்டாக்கக்கூடிய தன்மை இதுக்கு உண்டுங்கிறதை புரிஞ்சிக்கிட்டு சாப்பிடுறது நல்லது. செரிமானக்கோளாறு வராம பார்த்துக்கிடும்கிறதால இதை நம்மளோட தேவைக்கு ஏத்தமாதிரி சாப்பிடுறது நல்லது. நடுக்கம், பக்கவாதம்னு சில பிரச்சினைகளை சரிபண்ணும். ஆண்மைக்குறையை சரிபண்றதுக்கும் இது அற்புதமான மருந்துப்பொருள்.


ஒற்றைத்தலைவலி போக்கும்


வாந்தி, பேதி வந்தா அதுக்கு என்ன மருத்துவம் செய்யணுன்னு தெரியாம சிலபேர் நிறைய செலவு பண்ணுவாங்க. அதுக்கு ஜாதிக்காயை கசாயம் வச்சி குடிச்சாலே போதும். கண் பிரகாசமா தெரியணுன்னா ஜாதிக்காயை தண்ணி விட்டு இழைச்சி (உரசி) கண்ணைச் சுத்தி பற்று போட்டா சரியாயிரும். ஜாதிக்காயை தனியா இல்லாம சணல், சூடம் (கற்பூரம்), ஏலக்காய், கிராம்பு, சித்திரமூலவேர்னு எல்லாத்தையும் சேர்த்துப் பொடியாக்கி சாப்பிட்டு வந்தா இருமல், வயிற்றுவலி, ஒற்றைத் தலைவலி, மாதவிடாய் நேரத்துல வரக்கூடிய அதிக ரத்தப்போக்குன்னு நிறைய பிரச்சினைகள் சரியாகும்.

-விளம்பரம்-


புற்றுநோய் தடுக்கும்


நம்ம முன்னோர் இந்தமாதிரி எளிய மருத்துவத்தை செஞ்சி நல்ல உடல்நலத்தோட இருந்தாங்க. அதனாலதான் மருந்தா இல்லாம ஜாதிக்காய்ல ஊறுகாய் செஞ்சி சாப்பிடுவாங்க. அதாவது ஜாதிக்காயோட தோலை ஊறுகாய் செய்யலாம். இந்தமாதிரி ஒரு இணை உணவா சாப்பிடுறதுலயும் பலன் கிடைக்கும். இது ரத்தத்துல உள்ள கொழுப்பைக் குறைக்கிறதுக்கும் வெள்ளை அணுக்கள்ல வரக்கூடிய ரத்தப்புற்றுநோயையும் தடுக்கிறதுக்கும் பயன்படும்.


விந்து முந்துதல் பிரச்சினை


வெற்றிலை போடும்போது ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி சேர்த்து சாப்பிட்டு வந்தா தாம்பத்திய உறவு நல்லாகும். இதோட முந்திரி, திராட்சை, குல்கந்து, பாக்கு, சுண்ணாம்புன்னு வேற சில பொருள்களையும் சேர்த்துச் சாப்பிடணும். முக்கியமா விந்து முந்துதல் பிரச்சினைக்கு இதை மருந்தா கொடுக்கிறாங்க. இந்தமாதிரி பல வழிகள்ல ஜாதிக்காயை சாப்பிட்டு வந்தா வேற சில பிரச்சினைகளும் சரியாகும்.

  • எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here