- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets

விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் செய்து கொடுக்க முயற்சியுங்கள். அப்படி ஆரம்பிப்பவர்களா நீங்கள் உங்கள் முயற்சிளை இதமான இனிப்புடன் தொடங்கலாம். ரசகுல்லா விரும்பிகளுக்கு அதன் பேரைக் கேட்டாலே நாவின் மொட்டுகள் தாளம் போட ஆரம்பித்து விடும். சிலர் வாரத்தில் ஒரு முறையேனும் வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்.
அப்படி என்னதான் அந்த ரசகுல்லாவில் இருக்கு என்று கேட்டால் அதெல்லாம் ஃபீல் பண்ணி சாப்பிட்டு பார்த்தால்தான் தெரியும் என்பார்கள். அப்படி மெய் மறந்து ரசகுல்லாவை சுவைக்கும் விரும்பிகளுக்காகவே இந்த ரெசிபி. நாம் பொதுவாக வீட்டில் ரவா லட்டு, கேசரி, ரவை அப்பம், குளோப் ஜாமூன் போன்ற இனிப்புகளை தான் அதிகம் செய்திருப்போம். இதனை தவிர வேற இனிப்புகள் எனில் வெளியில் உள்ள கடைகளில் தான் வாங்குவோம்.
ரசகுல்லா, ரசமலாய் போன்ற இனிப்பு வகைகளை கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைப்போம். அனைத்து வயதினருக்கும் பிடித்த ஸ்வீட் பட்டியலில் நிச்சயம் ரசகுல்லாவும் ஒன்றாக இருக்கும். குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இந்த ரசகுல்லா செய்வதற்கு பலருக்கும் தெரியாது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பால் ரசகுல்லாவை வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : இனிப்பு பனியாரம் செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை லிட்டர் பால் சேர்த்து நன்கு காய்ந்ததும் வினிகர் சேர்த்து கலந்து விடவும்.
பால் திரிந்து வந்ததும் அதை வடிகட்டி தண்ணீரில் அலசி நன்கு பிழிந்து எடுத்து கொள்ளவும். பின் அதனை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் நன்கு கொதித்ததும் பன்னீரை மிகவும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை லிட்டர் பால் சேர்த்து காய்ந்ததும், அதில் குங்குமப்பூ, ஏலக்காய், பால் பவுடர், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் கலந்து கொண்டே இருக்கவும்.
பால் சிறிது சுண்டி வந்ததும் வேகவைத்துள்ள உருண்டைகளை சேர்த்து ஒரு கொதி வந்ததும் நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பால் ரசகுல்லா தயார்.






