- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாகளில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது கீரை மசாலா பக்கோடா. பொதுவாக இதுவரை கீரையில் பக்கோடா செய்து சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க அதுலையும் பாலக்கீரை வைத்து கண்டிப்பாக பக்கோடா செய்து பார்த்திருக்கவே மாட்டீர்கள்.
அந்த மாதிரி இதுவரைக்கும் கீரை வைத்து ஒரு பக்கோடா ரெசிபி ட்ரை பண்ணி பார்த்ததே இல்லையெனில் ஒரு தடவை இந்த மாதிரி பாலக்கீரை வைத்து சூப்பரான கீரை மசாலா பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள். இந்த கீரை மசாலா பக்கோடா வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் இருக்கும் அதோடு இந்த ரெசிபியை செய்வதும் மிகவும் சுலபம்.
இதுவரை பாலக் கீரை வைத்து கடையல், தொக்கு, பாலக் பன்னீர் ரெசிபி எல்லாம் செய்திருப்பீர்கள். அதனால் ஒரே ஒரு முறை இந்த கீரை மசாலா பக்கோடா செய்து பாருங்கள் அப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை செய்து சாப்பிடுவீர்கள். மாலை வேளையில் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கும் இதனை செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான கீரை மசாலா பக்கோடா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் வேகவைத்த உருளைக்கிழங்குடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், சில்லி பிளேக்ஸ், உப்பு, பன்னீரை துருவி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு பாலக் இலையை எடுத்து அதில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து மற்றொரு பாலக் இலையால் மூடி வைத்துக் கொள்ளவும். இப்படி அனைத்து இலைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் செய்து பாலக் கீரையை கடலை மாவு கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கீரை மசாலா பக்கோடா தயார்.






