- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். சைவ வகையில் இந்த சுவையான நாகர்கோவில் வெறும் குழம்பு
இதையும் படியுங்கள்: மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் இஞ்சி குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!
ஒன்று,இந்த சுவையான நாகர்கோவில் வெறும் குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்தநாகர்கோவில் வெறும் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
நாகர்கோவில் வெறும் குழம்பு செய்ய முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பூண்டு, மிளகாய் வற்றல், ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் அடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு மிக்ஸி ஜாரில் அடித்தவற்றை புளிகரைசல் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.
அதனை கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு கரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி கொதித்ததும் மிதமான தீயில் வைக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து நுரை போல் கொதி வந்ததும் அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். இப்பொழுது சுவையான வெறும் குழம்பு தயார்.






