- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- evening, sweets
அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. நாம் அனைவருக்கும் இனிப்பு சாப்பிடுவது என்றால் பிடிக்கும். அதிலும் சுவையான அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதுபோல் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும் அப்படித்தான் மிகவும் சுவையான ஒரு அல்வா தான் அதுவும் தர்பூசணி அல்வா.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கவுனி அரிசி பேரிச்சை அல்வா இப்படி செய்து பாருங்க!
நாம் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டிருப்போம் ஆனால் அதில் உள்ள சதைப் பகுதியை பயன்படுத்தி அல்வா செய்திருக்க மாட்டோம். இதை செய்ய நீங்கள் அதிக நேரம் செலவிடத் தேவையில்லை. வீட்டில் உள்ள சிறு பொருட்களை பயன்படுத்தியே இந்த ரெசிபியை எளிமையாக உங்களால் செய்ய முடியும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ரெசிபி உங்களது சமையல் பட்டியலில் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
Ingredients
Method
தர்பூசணியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.
பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு பிறகு கார்ன் பிளார், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
அது இப்பொழுது நன்கு கெட்டியான அல்வா பதத்திற்கு வந்தவுடன் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப் பருப்பை போட்டு நன்கு கிளறி வைக்கவும்.
அவ்வளவுதான் மாறுதலான தர்பூசணி அல்வா ரெடி.






