- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- sweets
சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இனிப்பு வகை என்றால் சொல்லவே வேண்டாம் எல்லோருக்கும் பிடிக்கும். காரம் சாப்பிடாதவர்கள் கூட இருப்பார்கள், ஆனால் இனிப்பு பிடிக்காமல் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்பான ரெசிபியை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு வகை இந்த பாசுந்தி. பாசுந்தி சுவை மிகுந்த நமது நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு வகை ஆகும்.
இது கர்நாடக, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் எல்லா சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகையின் போது இதை செய்து மகிழ்வர். பாசுந்தி என்பது பாலை பாதியாக சுண்ட காய்ச்சி அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய், உலர்ந்த பழங்கள் போட்டு செய்யப்படும் இனிப்பு வகையாகும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கல்யாண நிகழ்ச்சிகளிலும் வீட்டு விசேஷங்களிலும் கண்டிப்பாக இந்த பாசுந்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
பாசுந்தி என்றதும் ஏதோ கஷ்டமான ஓர் இனிப்பு வகை என்று நினைக்க வேண்டாம். இது பாயாசம் போன்றது. ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு இதனை அவ்வப்போது செய்து கொடுத்தால், அதில் சேர்க்கப்படும் நட்ஸ்களில் இருக்கும் சத்துக்கள் கிடைத்து, குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது பண்டிகைக் காலங்களில் வீட்டில் செய்தால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த பாசுந்தியை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பால் கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கும் போது ஒரு கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும்.
பின் பால் கொதிக்கும் போது ஓரத்தில் வரும் பாலாடையை ஒரு கரண்டியால் எடுத்து பாலில் சேர்த்து கலந்து விடவும்.
பின் பால் நன்கு சுண்டி பாதியளவு வந்ததும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து சுண்ட காய்ச்சி கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி, பால் பாத்திரத்தில் உள்ள பாலாடையை எடுத்து பாசுந்தியில் சேர்த்து கலந்து விடவும்.
பின் ஏலக்காய்த்தூள், நறுக்கிய முந்திரி, பிஸ்தா, பாதாம், குங்குமப் பூ சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான பால் பாசுந்தி தயார்.






