செயலிழந்த சிறுநீரகத்தை சீராக்கும் அற்புத மூலிகை!

- Advertisement -

மூக்கிரட்டை… இது ஒரு மூலிகையோட பெயர். குப்பைமேடுகள்லயும், ரோட்டோரத்திலயும், பூங்காக்கள்லயும் தானா வளரக்கூடிய மூலிகை இது. எல்லா காலங்கள்லயும் வளரக்கூடிய ஒரு மூலிகை. சாரணைக்கீரைல இதுவும் ஒரு வகைங்கிறதால மூக்கரைச்சாரணைனு சொல்வாங்க. இந்தக்கீரையில வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், கொழுப்புச்சத்துன்னு நிறைய சத்துகள் இருக்கு. இந்தக்கீரையை தனியா சமைச்சி சாப்பிடலாம், சூப் வச்சி குடிக்கலாம். குப்பைக்கீரை, கானாவாழைக்கீரைனு வேற சில கீரைகளோட மூக்கிரட்டைக் கீரையையும் சேர்த்து கலவைக்கீரைன்னு விப்பாங்க. இன்னும் பல கீரைகளோட கலவை பல நோய்களை சரிபண்ணும்.

-விளம்பரம்-

மலச்சிக்கல் காமாலை

கிராமப்புறங்கள்லன்னு இல்ல நகர்ப்புறங்கள்லயும்கூட கலவைக்கீரைகள் கிடைக்கும். ஆனா பலபேருக்கு இந்தக் கீரைகளோட பலன் தெரியல. சாதாரணமா கிடைக்கிற எந்தப்பொருளுக்கும் மதிப்பு இல்லன்னு சொல்வாங்களே. அந்தமாதிரிதான் மூக்கிரட்டை உள்பட மத்த கீரைகள்லாம் சாதாரணமா கிடைக்கிறதால அதோட மதிப்பு தெரியல. மூக்கிரட்டையை நெய் சேர்த்து பொரியலாவோ அல்லது கடைசல் செஞ்சோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தா கண் சம்பந்தமான எல்லா நோய்களும் சரியாகும். கூடவே மலச்சிக்கல் சரியாகுறதோட இதயத்துக்கு நல்ல பலம் கிடைக்கும். சிறுநீரைப் பிரிச்சி வெளியேத்தி காமாலை நோய், சைனஸ் பிரச்சினை, வாதநோய்னு எல்லாத்தையும் சரி பண்ணிரும்.

- Advertisement -

செரிமானக்கோளாறு

மூக்கிரட்டையோட வேர்கூட நல்ல மருந்துதான். அதை எண்ணெய்ல காய்ச்சி சாப்பிடலாம். அதை எப்பிடி செய்றதுன்னு பார்ப்போம். மூக்கிரட்டை வேர் ஒரு கைப்பிடி எடுத்து அதோட 4 மிளகு சேர்த்து 100 மில்லி விளக்கெண்ணெய்ல வாசனை வரும் வரைக்கும் காய்ச்சி ஆறுனதும் வடிகட்டி வச்சிக்கிடணும். இதை 6 மாச குழந்தைக்கு 15 மில்லியும், அதுக்கு மேல உள்ள குழந்தைகளுக்கு 30 மில்லியும் சாப்பிட கொடுத்துட்டு வந்தா முக்கல் முனகலோட மலம் போறது, மூலச்சூடு, வயிற்றுக்கழிச்சல், வாந்தி, செரிமானக்கோளாறு, சொறி சிரங்குன்னு பல பிரச்சினைகள் சரியாகும்.

கிட்னி ஃபெய்லியர்

சிறுநீர் போகக்கூடிய பாதையில ஏற்படக்கூடிய கல்லடைப்புல தொடங்கி சிறுநீரகச் செயலிழப்புன்னு சொல்லக்கூடிய கிட்னி ஃபெய்லியர் பிரச்சினைன்னு பல பிரச்சினைகளுக்கு மூக்கிரட்டை நல்ல மருந்து. மூக்கிரட்டை இலைகளை வதக்கி துவையல் செஞ்சி சாப்பிட்டு வந்தாலே இந்தப்பிரச்சினைகள் சரியாயிரும். கிட்னி ஃபெய்லியராகி டயாலிசிஸ் பண்ணித்தான் ஆகணுன்னு இருக்கிறவங்க மூக்கிரட்டையை சாப்பிட்டு வந்தாலே போதும். மூக்கிரட்டையோட வேர் இல்லன்னா அதோட முழு செடி 10 கிராம் அளவு எடுத்து கொஞ்சம் பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணி விட்டு கொதிக்க வச்சி குடிச்சிட்டு வந்தா போதும். இதை தினமும் குடிச்சிட்டு வந்தா அந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாகும்.

உடல்வலி எரிச்சல்

மூக்கிரட்டையோட இலை, தண்டு, வேர் எல்லாத்தையும் சேர்த்து ஒரு கசாயம் வச்சி குடிக்கலாம். இப்பிடி குடிச்சிட்டு வந்தா காய்ச்சல் சரியாகும். இதை சிறுநீரகக்கோளாறு உள்ளவங்க மட்டுமில்லாம எல்லோருமே குடிக்கலாம். இதை அப்பப்போ குடிச்சிட்டு வந்தா ரத்தம் சுத்தமாகும், உடல் வலி விலகும், வீக்கம் குணமாகும். சிறுநீர் போகக்கூடிய இடத்துல வரக்கூடிய எரிச்சலை சரிபண்ணும். இந்தமாதிரி பல பிரச்சினைகள் சரியாகும். அதேமாதிரி 10 கிராம் துத்தி வேர், கொஞ்சம் கருஞ்சீரகம், மூக்கிரட்டை சாறு கால் டம்ளர் சேர்த்துக் காய்ச்சி குடிச்சிட்டு வந்தா ரத்தத்துல உள்ள யூரியா கட்டுப்பாட்டுல இருக்கும்.

-விளம்பரம்-

மூட்டு வலி வீக்கம்

வாதம், கீல்வாதம் பிரச்சினைக்குக்கூட மூக்கிரட்டை நல்ல மருந்துதான். இதை வேரோட எடுத்து சீரகம். கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி குடிச்சிட்டு வந்தா வாதக்கோளாறுகள் சரியாகும். மூட்டுவலி, வீக்கம் சரியாகும். மஞ்சள்காமாலை உள்ளவங்க இதைக் குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும். இதை வாரத்துல ஒருநாள் குடிச்சிட்டு வந்தா கல்லீரல், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். புற்றுநோய்க்கு காரணமான நச்சுகளை வெளியேற்றக்கூடிய தன்மை இதுக்கு இருக்கு. இதோட இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்துட்டு வந்தாலும் மூட்டு வலி, வீக்கம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here