வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வதில் நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம். அப்படி குளிர்ச்சியான உணவுகள் என்று சொல்லும் போது ஐஸ்கிரீம், டெசர்ட் போன்ற உணவுகள் பிரதான இடத்தை பிடிக்கும். இதனை எவ்வளவு செய்து கொடுத்தாலும் அனைத்தும் அடுத்த நிமிடமே காலி ஆகிவிடும். குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் பிர்னி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த தேங்காய் பூ பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும். தேங்காய் பூ பிர்னி என்பது அரிசி புட்டு மற்றும் தேங்காய் பூவினால் செய்யப்படும் ஒரு சுவையான இந்திய இனிப்பு ஆகும்.
இது அரிசி நன்கு அரைக்கப்பட்டு, பால், குங்குமப்பூ தூள் மற்றும் பல்வேறு பொருட்களுடன் சேர்த்து செய்யப்படுகிறது. தேங்காய் பூவை அப்படியேவும் சாப்பிடலாம். அல்லது இதுபோன்று ஜூஸ் செய்து சாப்பிடலாம். இஸ்லாமியர்கள் சமையல் கலையில் பிர்னி ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஆகும். இது மிகவும் சுவையாகவும் சத்தும் நிறைந்ததாகும். வட இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், திருமணங்கள், பண்டிகைகள் அல்லது எந்த சிறப்பு கொண்டாட்டங்களிலும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. தேங்காய் பூவைக் கொண்டு செய்யப்படும் இந்த பிர்னியை நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக இந்த தேங்காய் பூ பிர்னியை வீட்டிலேயே தயார் செய்து, அவர்கள் எதிர்பார்க்காத போது அவர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி அளிக்கலாம்.
தேங்காய் பூ பிர்னி | Coconut Blossom Phirni Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 தேங்காய் பூ
- 2 கப் பால்
- 1/2 கப் பாசுமதி அரிசி
- குங்குமப் பூ சிறிதளவு
- 1/2 கப் சர்க்கரை
- முந்திரி, திராட்சை தேவையான அளவு
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் பாஸ்மதி அரிசியை நன்கு அலசி விட்டு 20 நிமிடங்கள் வரை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். தேங்காயில் உள்ள பூவை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்றாக கொதித்ததும் அதனுடன் குங்குமப்பூவை சேர்த்துக் கொதிக்க விடவும்.
- பின் பால் கொதிக்கும் போது அரிசியை கையால் நன்றாக நொறுக்கி அதை பாலில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- அரிசி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் இவை எல்லாம் ஒன்றாக கலந்து வந்ததும் அதனுடன் நறுக்கிய தேங்காய் பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சையை வறுத்து பிர்னியுடன் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தேங்காய் பூ பிர்னி தயார். இது சூடாகவும் பரிமாறலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்த பிறகும் பரிமாறலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மேங்கோ பிர்னி இந்த மாதிரி செஞ்சு கொடுத்த அசத்துங்க