சித்த மருத்துவம் நமக்கு போதித்த பழங்களின் தோலில் இருக்கும் மருத்து குணம்!

- Advertisement -

பழங்கள் எல்லாத்துக்கும் சத்து இருக்குங்கிறது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா, பழங்களோட தோலுக்கும் மருத்துவ குணம் இருக்குங்கிறது எத்தனைபேருக்கு தெரியும்? `கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்’னு பைபிள்ல ஒரு இடத்துல பார்த்த நினைவு இருக்கு. அதுமாதிரி பழங்களோட தோலுக்கும் நிறைய மருத்துவ குணம் இருக்கு. குப்பையில தூக்கிப்போடுற பழத்தோலுக்குள்ள மருத்துவ குணம் பத்தி பார்ப்போம்.

-விளம்பரம்-

ரத்த அழுத்தம் சீராகும்

எலுமிச்சம்பழத்துல ஜூஸ் பண்ணிட்டு அதோட தோலை தூக்கி எறிஞ்சிருவோம். சிலபேர் அதை மூலிகைப்பொடி, சீயக்காய் பொடி செய்றதுக்காக காய வச்சி எடுத்து வச்சிருப்பாங்க. எலுமிச்சை தோலை வெயில்ல காய வச்சி பொடியாக்கி தேன், ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்துல தேய்ச்சிட்டு வந்தா சருமம் பொலிவாகும். அதேமாதிரி எலுமிச்சைத் தோலை சாப்பிடுறதால நிறைய பலன்கள் கிடைக்கும். எலுமிச்சையோட தோல்ல கால்சியம், மக்னீசியத்தோட பொட்டாசியமும் சேர்ந்திருக்கிறதால ரத்தக்குழாயோட சுவர்களை லேசாக்கி ரத்த அழுத்தத்தை சீரா வச்சிருக்கும். ரத்த அழுத்தம் சீரா இருந்தாதான் இதயம் ஆரோக்கியமா இருக்கும். அதை எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.

- Advertisement -

இதய நோய்க்கு மருந்து

ஒரு முழு எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சி அதோட தோலை எடுத்துக்கோங்க. அந்த தோலுக்கு சமமா இஞ்சி எடுத்து அதோட தோலை நீக்கிடணும். இப்போ ரெண்டையும் பொடிப்பொடியா நறுக்கி அது மூழ்குற அளவுக்கு தண்ணி ஊத்தி ஒரு கொதி வந்ததும் இறக்கிடணும். அதிகமா கொதிக்க விட வேண்டாம்; ஒரு கொதி போதும். உடனே அதை வடிகட்டி காலைல வெறும் வயித்துல தொடர்ந்து 48 நாள் குடிச்சிட்டு வந்தா ரத்த அழுத்தம் சீராகுறதோட ரத்தக்குழாய் பாதிப்பு இருந்தா சரியாயிரும், இனிமே வராமலும் பாத்துக்கிடும். இது இதய நோயாளிகளுக்கு ஒரு அற்புதமான மருந்து.

நெஞ்செரிச்சல் சரியாகும்

ஆரஞ்சுப் பழத் தோலை வச்சி அருமையான ஒரு தேநீர் தயார் பண்ணலாம். எலுமிச்சைத்தோலை மாதிரியே ஆரஞ்சுத்தோலையும் நாம குப்பையில தூக்கி எறிஞ்சிருவோம். அப்பிடி தூக்கி எறியாம அதை காய வச்சி பயன்படுத்தலாம். இல்லன்னா தோலை உரிச்சும்கூட பயன்படுத்தலாம். ஆரஞ்சுத்தோலோட கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தண்ணி விட்டு கொதிக்க வச்சி நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதால செரிமானக்கோளாறு சரியாகும். இன்னைக்கி பலபேர் சாப்பாடு செரிமானமாகல, ஒரே நெஞ்செரிச்சலா இருக்குன்னு சொல்றதைக் கேட்டிருப்பீங்க. அதுக்கு இந்த ஆரஞ்சுத்தோல் டீ ரொம்ப நல்லது. வாரத்துல ரெண்டு, மூணு நாள் இதுமாதிரி ஆரஞ்சுத்தோல் டீ செஞ்சி குடிக்கலாம்.

கருவளையம் நீங்கும்

ஆரஞ்சுத்தோலை பசை மாதிரி அரைச்சி பல் தேய்ச்சா கறையும், பல் கூச்சமும் சரியாகும். வேப்பங்கொழுந்தோட ஆரஞ்சுத்தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் சேர்த்து முகத்துல பூசி அஞ்சு நிமிஷம் கழிச்சி கழுவுனா கண்ணுக்கு கீழ உள்ள கருவளையம் மறைஞ்சிரும். இதேமாதிரி ஆப்பிள் பழத்தைச் சாப்பிடும்போது அதோட தோலையும் சேர்த்துச் சாப்பிட்டா கண்புரை நோய் வராம பார்த்துக்கிடலாம். ஆப்பிள் பழத் தோல்ல கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம் சத்துகள் இருக்கிறதால கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை ஏற்படாம பார்த்துக்கிடும். மார்பகப் புற்றுநோய் வராம தடுக்கிறதுக்கும் ஆப்பிள் தோல் உதவும். ஆனா, இன்னைக்கி சூழல்ல பூச்சி மருந்து தெளிச்சும், மெழுகு தடவியும் ஆப்பிள் விற்கிறதால அதெல்லாம் இல்லாம இயற்கைமுறையில விளைஞ்சதை வாங்கிச் சாப்பிடுங்க.

-விளம்பரம்-

தோல் நோய் விலகும்

வாழைப்பழத் தோல்ல பல் தேய்ச்சா பல் வெள்ளையாகும். அதேமாதிரி வறட்சியான சருமம் மேல வாழைப்பழத்தோலை தேய்ச்சிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். வாழைப்பழத்தோலை அரிப்பு உள்ள இடத்துலயும் தோல் சிவந்து தடிப்பா உள்ள இடத்துலயும் பூசிட்டு வந்தா பழைய நிலைமைக்கு மாறிரும். சொரியாசிஸ் மாதிரி தோல் நோய்களும்கூட சரியாகும். முகத்துல பருக்களும், மருக்களும் உள்ள இடங்கள்ல வாழைப்பழத்தோலை தினமும் தேய்ச்சி 5 நிமிஷம் மசாஜ் பண்ணிட்டு வந்தா ஒரு வாரத்துல பலனை உணர முடியும்.

மார்பகம் எடுப்பாகும்

மாதுளம்பழத் தோலைப் பொடியாக்கி அதோட சம அளவு பாசிப்பருப்பு சேர்த்து அரைச்சி உடம்புல பூசி குளிச்சிட்டு வந்தா வியர்வை நாற்றம் சரியாகும். சூடு குறைஞ்சி உடல் குளிர்ச்சியாகும். மாதுளையோட தோலை பொடியாக்கி தண்ணியோட சேர்த்து வாய் கொப்பளிச்சா வாய் நாற்றம் சரியாகும். பெண்கள்ல சிலபேரோட வருத்தம் என்னன்னா தொங்கிப்போன மார்பகம். அதை திரும்பவும் இயல்பு நிலைக்கு கொண்டு வர்றதுக்கு மாதுளைத்தோல் நல்ல மருந்தா பயன்படும். மாதுளைத்தோலை அரைச்சி அதோட கடுகு எண்ணெய் சேர்த்து மார்பகப்பகுதியில மசாஜ் பண்ணணும். இதை தினமும் தூங்கப்போறதுக்கு முன்னாடி அஞ்சுல இருந்து பத்து நிமிஷத்துக்கு முன்னாடி செய்யணும். இப்பிடி செஞ்சிட்டு வந்தா நல்லா பலன் கிடைக்கும். மார்பகம் எடுப்பாகும்.

வெள்ளைப்படுதல் சரியாகும்

சப்போட்டா பழத்தை நல்லா கழுவி தோலோட சாப்பிட்டு வந்தா சப்போட்டோவோட முழு சத்துகளும் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரியாகும். பப்பாளிப்பழத்தை அதோட தோலையும் சேர்த்து நல்லா மசிச்சி முகத்துல பூசுனா கரும்புள்ளி, கருவளையம் மறைஞ்சிரும். மாம்பழத்தையும் இதேமாதிரி தோலோட சேர்த்து அரைச்சி பூசிட்டு வந்தா கருவளையம், முகப்பரு சரியாகும். மங்குஸ்தான் பழ ஓட்டை அரைச்சி அதுல ஒரு டீஸ்பூன், அரை ஸ்பூன் கடுக்காப்பொடி கொஞ்சம் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சி பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சா பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் பிரச்சினை சரியாயிரும். இதுமாதிரி இன்னும் பல பழங்களோட தோலை மருந்தா பயன்படுத்தி பலன் பெறலாம்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here